சனி, 11 ஆகஸ்ட், 2012

அல்கோர் ஸஹர் நேர சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி 09/08/2012

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கடந்த 09/08/2012  வியாழக்கிழமை கத்தர் இந்திய தவ்ஹீத் மையம் நடத்திய "ரமலான் ஸஹர் நேர சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி" அல்கோர் ஸ்போர்ட்ஸ் கிளப்  உள்ளரங்கத்தில்  இஷா மற்றும் இரவு தொழுகையை தொடர்ந்துஇரவு 10.30  மணி  முதல் அதிகாலை 3.30 மணிவரைமண்டல துணைத் தலைவர் சகோதரர். ஜியாவுதீன் அவர்கள் தலைமையில்நடைபெற்றது. சகோதரர். ஜியாவுதீன் அவர்கள் வரவேற்புரை வழங்கினார்கள்.

அடுத்ததாக கத்தர் இந்திய தவ்ஹீத் மையத்தின் அழைப்பாளர் .சகோதரர். அப்துர்ரஹ்மான்  அவர்கள் "அழைப்போம் வாருங்கள்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.

அடுத்ததாக  தாயகத்திலிருந்து வருகை  புரிந்துள்ள  சகோதரர். எம்.எம். சைபுல்லாஹ் Misc அவர்கள் "சுய பரிசோதனை" என்ற தலைப்பில் சொற்பொழிவு நிகழ்த்தினார்கள்.   அவர்கள் தனது உரையில் நபி ஸல் அவர்கள் கற்றுத்தந்த வழிமுறைப்படி தான் நம்முடைய வாழ்க்கை அமைத்திருக்கிறதா என்பதை நம்மை நாமே சுய பரிசோதனை செய்து தெரிந்து கொள்ள வேண்டும் என்றும் அதற்கு சில உதாரணங்களாக நபி ஸல் அவர்கள் தாடி வைப்பதை வலியுறித்தினார்கள் ஆனால் இன்று நம்மில் பலர் அந்த தாடி வைப்பதை மனைவியரின்  திருப்திக்காக அதை செய்வதில்லை என்பதையும் வட்டியை அல்லாஹ் தடுத்துள்ளதை இன்று சர்வ சாதரணமாக மீறுவதையும்  தனது உரையில் சுட்டிக்காட்டினார்கள் (வீடியோ).

மண்டல மர்கசில் சகோதரர் .அன்ஸார் .மௌலவி அவர்கள் நடத்திய அரபி ஆரம்பநிலை  பாட வகுப்பில் கலந்துகொண்டு தேர்வு எழுதி வெற்றிபெற்ற சகோதர, சகோதரிகள், சிறுவர் சிறுமியருக்கான சான்றிதழ்களை  சகோதரர் அப்துஸ்ஸமத்மதனீ,சகோதரர்.சைபுல்லாஹ் ஹாஜா Misc . ஆகியோர் வழங்கினார்கள்.

மண்டல  செயலாளர் சகோதரர் .முகமது அலி  அவர்கள் மண்டல செயல்பாடுகள் மற்றும்  எதிர்வரும் நிகழ்சிகள் குறித்த அறிவிப்புகளை செய்தார்கள். அல்கோர்  கிளையின் பொறுப்பாளர் சகோதரர். நைனாமுஹமத் அவர்கள் நன்றியுரை  வழங்கினார்கள். இந்நிகழ்ச்சியில் 250    க்கும் அதிகமான சகோதர, சகோதரிகள் சிறுவர் சிறுமியர் கலந்துகொண்டனர். வந்திருந்த அனைவருக்கும் ஸஹர் உணவு பரிமாறப்பட்டது. உணவுக்கான ஏற்பாட்டினை உணவுக் குழுவினர்  சிறப்பாக செய்திருந்தனர்.  தொண்டரணியினர்  நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற நல்ல ஒத்துழைப்பு வழங்கினார்கள். அல்ஹம்துலில்லாஹ்.