புதன், 26 பிப்ரவரி, 2014

21-02-2014 வெள்ளிகிழமை அன்று நடைபெற்ற கத்தர் மண்டல பொது குழு









அல்லல்ஹுவின் மாபெரும் கிருபையால் சென்ற வெள்ளிகிழமை 21-02-2014 அன்று கத்தர் மண்டல பொது குழு நடைபெற்றது .

மண்டல த்தலைவர் சகோதரர் மஸ்வூத் அவர்களின் தலைமையில் சரியாக மதியம் இரண்டு மணியளவில் தொடங்கப்பட்டது. முதலாவதாக சவூதி மர்கசின் அழைப்பாளர் சகோதரர் மௌவ்லவி அப்துஸ் ஸமத் மதனீ அவர்கள் "இக்லாஸ்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். அடுத்ததாக மண்டல பொருளாளர் சகோதரர் இலியாஸ் அவர்கள் வரவு செலவு கணக்கை வாசித்தார்.

மண்டல செயலாளர் முஹம்மத் அலி அவர்கள் கிளைகள் செயல் பாடுகள் மற்றும் தாவா பணிகளில் செய்ய வேண்டியது என்ன ? செய்ய கூடாது என்ன ? என்று பட்டியலிட்டு விளக்கி கூறினார்கள். கிளைகள்  மாதந்திர தாவா பற்றிய அறிக்கை சமர்பிக்க எதுவாக படிவத்தை வெளியிட்டார்கள். சிறந்த முறையில் தாவா செய்யும் கிளைகளுக்கு புள்ளிகள் வழங்கப்பட்டு தர வரிசை நிர்ணியக்கபடும் என்று அறிவித்தார்கள்.

பின்னர் ஆலோசனை நேரம் கொடுக்கப்பட்டு, பொது குழு உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு தலைவர் மற்றும் செயலாளர் விளக்கமளித்தார்கள்.

மண்டல தலைவர் இறுதியாக ஈரோட்டில் நடைபெற இருக்ககூடிய மாநில பொது குழு தங்களுடைய கருத்து என்ன ? என்று கேட்டார்கள். அனைவரும் ஒரு மனதாக ஒரே குரலில் மாநில பொது குழு எடுக்கும் முடிவுகளுக்கு முழுமையாக கட்டுப்படுவோம் என்று கூறினார்கள்.

மண்டல் துணை செயலாளர் காதர் மீரான் அவர்கள் நன்றியுரைடன் பொது குழு சிறப்பாக முடிவுற்றது. அல் ஹம்துலில்லாஹ்.


مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863 
Mobile:55532718, 66579598
E-mail: qitcdoha@gmail.com