புதன், 18 பிப்ரவரி, 2015

ஒவ்வொரு செய­லிலும் தூய்மை


ஒவ்வொரு செய­லிலும் தூய்மை

ஒரு மனிதன் தன் அன்றாட வாழ்வின் அனைத்து நிலைகளிலும் தூய்மையைப் பேண வேண்டும் என்பதற்காக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சிறந்த வழிமுறைகளை கற்றுத் தந்துள்ளார்கள். விஞ்ஞானம் வளர்ந்த இக்கால கட்டத்தில் கூட இவ்வழிமுறைகள் பேணப்படுவதில்லை. இன்று தூங்கி எழுந்த உடன் கை கழுவாமல் பல் துலக்காமல் பெட் காஃபி என்று சொல்லி­க் கொண்டு அதைப் பருகுகின்றார்கள். இந்த (நாகரீக மேதைகளுக்கு) நாயகம் (ஸல்) அவர்கள் கற்றுத் தருகின்ற சுத்தத்தைப் பாருங்கள்.

''உங்களில் ஒருவர் தன் உறக்கத்தி­ருந்து விழித்துவிட்டால் அவர் தன்னுடைய கையை மூன்று முறை கழுவும் வரை பாத்திரத்தில் அதை விட வேண்டாம். ஏனென்றால் அவருடைய கை இரவில் எங்கு இருந்தது என்பதை அவர் அறிய மாட்டார்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். 
அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா (ரலி­) நூல்: முஸ்­லிம் 467

நாம் உறங்கும் போது சுய நினைவையே இழந்து விடுகிறோம். எனவே நம்மையறியாமல் கொசுக்கள் நம் மூக்கிற்குள் நுழைந்து விடுகின்றது. சில நேரங்களில் தூங்கி விட்டு சளியைச் சிந்தும் போது இதை நம்மால் உணர முடியும். அசுத்தங்களில் உழலக் கூடிய, பல வகையான இரத்தங்களை உறிஞ்சி வாழும் கொசு நம் மூக்கிற்குள் இருப்பது உடலுக்குத் தீங்கு விளைவிக்கும். அதுமட்டுமின்றி அழுக்குகள் அங்கு திரண்டு இருப்பதற்கும் வாய்ப்புகள் உள்ளன. 

இதற்கு நபி (ஸல்) அவர்கள் காட்டித் தருகின்ற வழி இதோ:

நீங்கள் தூக்கத்தி­ருந்து எழுந்து உளூ செய்தால் மூன்று முறை (நீர் செலுத்தி) நன்கு மூக்கைச் சிந்தி (தூய்மைப் படுத்தி)க் கொள்ளுங்கள். ஏனெனில் நீங்கள் (தூங்கும் போது) மூக்கின் உட்பகுதிக்குள் ஷைத்தான் தங்கியிருந்தான்.
அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ர­லி) நூல்: புகாரீ 3295 

இந்த ஹதீஸில் நபி (ஸல்) அவர்கள் ஷைத்தான் என்று குறிப்பிடுவது இப்லீஸை அல்ல. மாறாக தீங்கு தரக் கூடிய அசுத்தங்களாகும். ஷைத்தான் தீங்கு தருவதைப் போன்று இவைகளும் தீங்கு தருவதினால் பெருமானார் (ஸல்) அவர்கள் இதை ஷைத்தானுடன் ஒப்பிட்டுக் கூறியுள்ளார்கள். தூங்கி எழுந்தவுடன் முகத்தைக் கழுவுவதும் பல்லைத் துலக்குவதும் தான் நம் வழக்கில் உள்ளது. ஆனால் மூக்கிற்குள் நீர் செலுத்திக் கழுவ வேண்டும் என்பதை பெருமானார் கூறியதின் மூலமே அறிந்து கொண்டோம். இல்லையென்றால் அழகான இந்த நடைமுறையை இழந்திருப்போம். பெரும்பாலும் இந்த சுன்னத்தை யாரும் கடைப்பிடிப்பதில்லை. நாம் இதை அவசியம் கடைப்பிடித்து நம்மைத் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும்.

இன்றைய விஞ்ஞானம் பல் துலக்குவதை அதிகம் வ­யுறுத்துகிறது. சாப்பிடுவதற்கு முன்னும் பின்னும் உறங்கச் செல்வதற்கு முன்னும் பின்னும் துலக்க வேண்டும் என்று கூறுகிறது. இக்கருத்தை வ­யுறுத்தி நபி (ஸல்) அவர்கள் எவ்வளவு அற்புதமாகச் சொன்னார்கள் என்பதைப் பாருங்கள்.

என் சமுதாயத்திற்குச் சிரமமாகி விடும் என்று இல்லாவிட்டால் ஒவ்வொரு தொழுகைக்கும் பல் துலக்குமாறு நான் கட்டளை இட்டிருப்பேன் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். 
அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ர­லி) நூல்: புகாரீ 887

நபி (ஸல்) அவர்கள் பால் குடித்த பின் வாய் கொப்புளித்து விட்டு, அதில் கொழுப்பு உள்ளது என்று கூறினார்கள். 
அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ் (ர­லி) நூல்: புகாரீ 211

தன்னுடைய உடலைப் பாதுகாப்பதற்காக மட்டுமில்லாமல் இறைவனுடைய பொருத்தத்தைப் பெறுவதற்காகவும் பல் துலக்க வேண்டும் என்று இஸ்லாம் கூறுகிறது. தூய்மை இறைவனது திருப்திக்கும் தூய்மையின்மை அவனது அதிருப்திக்கும் காரணம் என பின்வரும் ஹதீஸ் தெளிவாக எடுத்துரைக்கிறது.

பல் துலக்குவது வாயைத் தூய்மைப்படுத்தும். இறைவனின் பொருத்தத்தைப் பெற்றுத் தரும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். 
அறிவிப்பாளர்: ஆயிஷா (ர­லி) நூல்: நஸயீ 5

சூடான பானம் ஏதும் அருந்தும் போது அதை நாம் ஊதிப் பருகுகிறோம். தண்ணீர் குடிக்கும் போது பாத்திரத்திற்குள்ளே மூச்சை விடுகிறோம். இது தவிர்க்க வேண்டிய செயலாகும். ஏனென்றால் நாம் சுவாசிக்கும் போது பல வகையான காற்றுக்கள் உள்ளே செல்கிறது. நுரையீரல் உடலுக்குத் தேவையான ஆக்ஸிஜனை எடுத்துக் கொண்டு கரியமில வாயுக்களை வெளியே அனுப்புகிறது. இப்படி வெளிவரும் காற்று கழிவுக் காற்றாகும். இதனால் உடலுக்கு எந்தப் பயனும் இல்லை. இதை நாம் பானத்தில் செலுத்தினால் பானம் அசுத்தமாகும் நிலை ஏற்படும்.

அது மட்டுமல்லாமல் நாம் உள்ளிழுத்தக் காற்று வெளியேறக் கூடிய பாதையான மூக்கும் அசுத்தமானதாகும். இதன் வழியே கடந்து வந்த காற்றை பானத்தில் விடுவது அருவருக்கத்தக்க செயலாகும். இது போன்ற காரணங்களால் மார்க்கம் பாத்திரத்தில் மூச்சு விடுவதைத் தடை செய்கிறது.

உங்களில் ஒருவர் (எதை) அருந்தினாலும் அந்தப் பாத்திரத்திற்குள் அவர் மூச்சு விட வேண்டாம். கழிப்பிடம் சென்றால் ஆண் குறியை தமது வலக் கரத்தால் தொடவோ தூய்மைப்படுத்தவோ வேண்டாம் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பாளர்: அபூ கதாதா (ரலி­) நூல்: புகாரீ 153

நாகரீக நாற்றங்கள்

பெரும்பாலும் மேலைநாடுகளில் ஒவ்வொரு வீட்டிலும் குழந்தை இருக்கிறதோ இல்லையோ கண்டிப்பாக நாய் இருக்கும். குழந்தையைக் கட்டி அணைத்து முத்தம் கொடுப்பது போன்று நாயைக் கட்டியணைக்கிறார்கள். இரவில் அதனுடன் சேர்ந்து உறங்குகிறார்கள்.

நாய்க்கு சுத்தம், அசுத்தம் என்று பிரிக்கத் தெரியாது. அசுத்தமான இடங்களில் எல்லாம் அமரும். அதனுடைய வயிற்றில் உள்ள கிருமிகள் பின்புறத்தின் வழியாக மலம் வரும் போது அதனுடன் சேர்ந்து வருகிறது. நாய் தன் பின்புறத்தை நாவால் நக்கும் போது அங்குள்ள கிருமிகள் முகத்தில் ஒட்டிக் கொள்கிறது. நாயைத் தூக்கி கொஞ்சும் போது அதிலுள்ள கிருமிகள் அவருடைய முகத்தில் ஒட்டிக் கொள்கின்றன. இதனால் பலவிதமான நோய்களுக்கு ஆளாகுகிறார்கள். 

நாயுடைய எச்சி­ன் விளைவை நன்கு விளங்கியும் இருக்கிறார்கள். நாயின் எச்சி­ன் மூலம் ரேபிஸ் என்ற நோய் பரவுவதாகச் செய்திகள், எச்சரிக்கை நோட்டீஸ்கள் எல்லா மருத்துவமனையிலும் ஒட்டப்பட்டுள்ளன. யாரையாவது நாய் கடித்து விட்டால் பத்து, பதினாறு ஊசிகள் போடப்படுகின்றன. எந்த மிருகம் கடித்தாலும் இத்தனை ஊசி போடப்படுவது கிடையாது. நாயின் எச்சில் மாபெரும் விபரீதத்தை ஏற்படுத்தும் என்று அறிந்தும் அதனுடன் அதிகத் தொடர்பு வைத்துள்ளார்கள். 

நபி (ஸல்) அவர்கள் நாயினால் ஏற்படும் விபரீதத்தைப் பயந்து, எந்த மிருகத்திற்கும் சொல்லாத ஒரு எச்சரிக்கையை நாய் விஷயத்தில் விடுத்துள்ளார்கள்.

உங்களில் ஒருவருடைய பாத்திரத்தில் நாய் வாய் வைத்து விட்டால் அதைத் தூய்மை செய்யும் முறையானது, ஏழு முறை அதை அவர் கழுவுவதாகும். முதல் முறை மண்ணால் அதைக் கழுவ வேண்டும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி­) நூல்: முஸ்லி­ம் 471

இன்று நோய்கள் பெரும்பாலும் நீரினாலேயே பரவுகின்றன. அதனால் தான் நீரை நன்கு கொதிக்க வைத்துப் பருக வேண்டும் என்று மருத்துவர்கள் ஆலோசனை கூறுகிறார்கள். நீர் மாசுபட்டுப் போவதற்கு முக்கியக் காரணம் மக்கள் தான்.

குடிநீர் குளங்களில் ஆடு மாடுகளையும், வண்டிகளையும் குளிப்பாட்டுகிறார்கள். அதிலே மலம், ஜலங்களை கழிக்கவும் செய்கிறார்கள். பின்பு அதில் அவர்களும் குளிக்கிறார்கள். இப்படி நீரை அசுத்தப் படுத்துவதால் நோய்கள் நம்மை நோக்கிப் பெருக்கெடுத்து ஓடி வருகின்றன. நீர் நிலைகளில் தூய்மையைப் பேண வேண்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறி, தூய்மையின் முக்கியத்துவத்தை உணர்த்துவதைப் பாருங்கள்.

''உங்களில் எவரும் தேங்கிக் கிடக்கும் நீரில் சிறுநீர் கழித்து விட்டுப் பிறகு அதில் குளிக்க வேண்டாம்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி­) நூல்: முஸ்லி­ம் 475

சிறுநீர் கழிப்பதன் ஒழுங்குகள் பலருக்குத் தெரிவதில்லை. ஆடு மாடுகள் நின்று கொண்டு கழிப்பதைப் போன்று இவர்களும் நின்று கொண்டு சிறுநீர் கழிக்கிறார்கள். கால்நடைகள் குறைந்த அறிவை பெற்றிருப்பதால் அவற்றுக்குச் சுத்தத்தைப் பற்றியும் தெரியாது. அசுத்தத்தைப் பற்றியும் தெரியாது. ஆனால் சிந்திக்கின்ற அறிவை வழங்கப்பட்ட மனிதன் தனக்கு எது உகந்தது என்று சிந்தித்துச் செயல்படாமல் அவைகளைப் போன்றே செயல்படுகிறான்.

நின்று கொண்டு சிறுநீர் கழிக்கும் போது அவனுடைய மேனியில் சிறுநீர் தெறித்து விடுகிறது. சாதாரண இந்த அறிவைக் கூட மனிதன் பெறாமல் இருப்பது தான் நமக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. உலகத்தாருக்கு அழகிய முன்மாதிரியாகத் திகழ்ந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இதிலும் அழகிய முன்மாதிரியாகத் திகழ்ந்துள்ளார்கள்.

(சத்தியத்தையும் அசத்தியத்தையும்) பிரித்துக் காட்டக் கூடிய குர்ஆன் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு அருளப்பட்ட பின்பு அவர்கள் நின்று கொண்டு சிறுநீர் கழித்தார்கள் என்று யாரேனும் உமக்கு அறிவித்தால் அவரை நம்பி விடாதே! பிரித்துக் காட்டக் கூடிய குர்ஆன் அவர்களுக்கு அருளப்பட்டதலி­ருந்து அவர்கள் நின்று சிறுநீர் கழித்ததே இல்லை. 
அறிவிப்பாளர்: ஆயிஷா (ரலி­) நூல்: அஹ்மத் 24604

ஆனால் சில நேரங்களில் நபி (ஸல்) அவர்கள் நின்று கொண்டு சிறுநீர் கழித்துள்ளார்கள். சிறுநீர் கழிக்கக் கூடிய இடம் அசுத்தமாக இருக்குமானால் நாம் உட்கார வேண்டியதில்லை. உட்கார்ந்து இருப்பதன் நோக்கமே அசுத்தம் படக் கூடாது என்பது தான். உட்கார்ந்தால் அசுத்தம் பட்டுவிடும் என்று இருந்தால் நின்று கொண்டு சிறுநீர் கழிப்பதே சிறந்தது. மொத்தத்தில் தூய்மை அவசியம்.

நபி (ஸல்) அவர்கள் ஒரு சமூகத்தாரின் குப்பை கூளங்கள் போடும் இடத்தில் வந்து நின்று சிறுநீர் கழித்தார்கள். பின்னர் தண்ணீர் கொண்டு வரச் சொன்னார்கள். நான் தண்ணீர் கொண்டு வந்தேன். அதில் நபி (ஸல்) அவர்கள் உளூச் செய்தார்கள். 
அறிவிப்பாளர்: ஹுதைஃபா (ர­லி) நூல்: புகாரி 224

அசுத்தம் தரும் அசுர வேதனை

சுத்தம் ஈமானில் பாதி என்று கூறுவதோடு மட்டுமல்லாமல் சுத்தத்தைக் கடைப்பிடிக்காதவருக்குத் தண்டனையும் இருப்பதாக இஸ்லாம் எச்சரிக்கிறது.

பொதுவாக மலம் கழித்து விட்டால் அனைவரும் கழுவி விடுவோம். ஆனால் சிறுநீர் கழித்தால் அதைப் பெரும்பாலானோர் தூய்மை செய்வதில்லை. அதை ஒரு அசுத்தமாகக் கணக்கிடுவதே இல்லை. ஆங்காங்கே சாலையோரங்களில் சிறுநீர் கழிப்பவர்கள் கழித்து விட்டுச் சுத்தம் செய்யாமல் இருந்து விடுகிறார்கள். இப்படி செய்பவர்கள் தண்டிக்கப் படுவார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்கா அல்லது மதீனாவில் உள்ள ஒரு தோட்டத்தைக் கடந்து சென்றார்கள். (அப்போது) கப்ரில் வேதனை செய்யப்பட்டுக் கொண்டிருந்த இருவரின் சப்தத்தைச் செவியுற்றார்கள். பின்பு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ''இவர்கள் வேதனை செய்யப்படுகிறார்கள். பெரிய (குற்றம்) ஒன்றுக்காக இவர்கள் தண்டிக்கப்படவில்லை. மாறாக அவர்களில் ஒருவன் சிறுநீர் கழித்து விட்டுத் தூய்மை செய்யாதவனாக இருந்தான். மற்றொருவன் கோள் சொல்­லித் திரிபவனாக இருந்தான்'' என்று கூறினார்கள். 
அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ்(ர­லி) நூல்: நஸயீ 2041

மக்கள் கூடக் கூடிய இடங்களான இரயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள் ஆகிய இடங்களில் அசுத்தப்படுத்தி மக்களை ஏராளமானோர் துன்புறுத்துகிறார்கள். அவ்விடங்களுக்கருகில் நடந்து செல்வது மக்களுக்குப் பெரும் சிரமத்தை ஏற்படுத்துகிறது. 

இங்கு அசுத்தம் செய்யாதீர்கள் என்று அறிவிப்புப் பலகைகள் தொங்க விடப்பட்டிருந்தாலும் அதைப் பொருட் படுத்தாமல் செத்தவன் காதில் சங்கு ஊதுவதைப் போன்று நடந்து கொள்கிறார்கள். இந்தத் தீய செயலை நபி (ஸல்) அவர்கள் கண்டிக்கிறார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ''சாபத்தைப் பெற்றுத் தரும் இரு காரியங்களை விட்டு விலகிக் கொள்ளுங்கள்'' என்று கூறினார்கள். மக்கள், ''சாபத்தைப் பெற்றுத் தரும் அந்த இரண்டு விஷயங்கள் என்ன?'' என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், ''மக்கள் (செல்லும்) பாதையில் இயற்கைத் தேவையை நிறைவேற்றுபவன். அல்லது அவர்கள் நிழலாரக் கூடிய இடத்தில் இயற்கைத் தேவையை நிறைவேற்றுபவன்'' என்று கூறினார்கள்.
அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி­) நூல்: முஸ்­லிம் 448

அதே நேரத்தில் இக்கொடிய செய­ல் ஈடுபடாமல் பாதையில் கிடக்கின்ற அசுத்தங்களை அகற்றினால் இது ஈமானில் ஒரு பகுதியாக ஆகி விடுகின்றது.

''இறை நம்பிக்கை (ஈமான்) என்பது எழுபதுக்கும் அதிகமான கிளைகளை கொண்டதாகும். அவற்றில் உயர்ந்தது 'அல்லாஹ்வைத் தவிர வேறு நாயன் இல்லை' என்று கூறுவதாகும். அவற்றில் தாழ்ந்தது, தொல்லை தரும் பொருளைப் பாதையி­ருந்து அகற்றுவதாகும். வெட்கமும் இறை நம்பிக்கையின் ஒரு கிளையாகும்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். 
அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ர­லி) நூல்: முஸ்­லிம் 58

நம்மையும் நமது சுற்றத்தையும் தூய்மையாக வைத்து அல்லாஹ்வின் நேசத்தைப் பெறும் பாக்கியத்தை நம் அனைவருக்கும் அவன் வழங்குவானாக!

நன்றி: துபை TNTJ