வியாழன், 26 பிப்ரவரி, 2015

மனித நேயம்

மனித நேயம்

மனிதனிடத்தில் அவசியம் இருக்க வேண்டிய பண்புகளில் மிக முக்கியமான பண்பு மனித நேயம். மனித நேயம் என்றால் மனிதன் மற்ற மனிதர்களை ஆடுமாடுகளைப் போன்று எண்ணாமல் மனிதர்களாக நடத்துவதாகும். 

தனக்கு விரும்பும் நன்மைகளை பிறருக்கு விரும்புவதும், தான் விரும்பாததை பிறருக்கும் விரும்பாமல் இருப்பதும் மனித நேயமாகும். இப்பண்பு இல்லாவிட்டால் மனிதன் மிருகத்தை விட மோசமான நிலையை அடைவதை அன்றாட வாழ்வில் அதிகம் அதிகமாகக் கண்டு வருகிறோம். 

இறைவன் மனிதனுக்குப் பயன் படக்கூடிய உறுப்புகளை ஏற்படுத்தி வெறும் உடலாக மட்டும் அவனைப் படைக்கவில்லை. உலகம் இயங்க வேண்டும் என்பதற்காக உடலுடன் பல நல்ல குணங்களையும் தன்மைகளையும் சேர்த்தே உருவாக்கியுள்ளான். 

நன்மைகளும் தீமைகளும்

மனித நேயம் மட்டும் மனிதனிடம் எடுபட்டுப் போயிருந்தால் என்றைக்கோ இந்த உலகம் அழிந்திருக்கும். இக்குணத்தை இறைவன் சிலரிடத்தில் இயற்கையாகவே அமைத்திருப்பதால் மனிதநேயம் அற்றவர்கள் செய்யும் கொடுமைகளின் போது, மனிதநேயம் உள்ளவர்கள், பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவியாக இருந்து அவர்கள் இந்த உலகில் வாழ்வதற்கு ஏதுவாக இருக்கிறார்கள். உலகத்தில் அனைவரிடத்திலும் மனிதநேயம் இல்லாமல் போனால் என்ன ஏற்படும் என்பதை சிறிது சிந்தித்துப் பாருங்கள். 

எல்லோரும் கொள்ளையர்களாகவும் கொலை செய்பவராகவும் இருந்தால் நாம் நிம்மதியாக இந்த உலகத்தில் உலாவர முடியுமா? மிகவும் சொற்ப எண்ணிக்கையில் இருக்கக்கூடிய காட்டுமிராண்டிகள் செய்யும் அக்கிரமங்களையே மக்களால் தாங்க முடியவில்லை. எல்லோரும் இவர்களைப் போன்று இருந்தால் என்ன ஏற்படும் என்பதைச் சொல்லவா வேண்டும்? 

மனிதநேயத்தின் நன்மைகளையும் அது இல்லாமல் போனால் ஏற்படுகின்ற தீமைகளையும் தெளிவாகப் புரிந்து கொள்வதற்கு சில வருடங்களுக்கு முன்னால் நேரிட்ட சுனாமி சம்பவம் சிறந்த உதாரணம். வீட்டை இழந்து குடும்பத்தை இழந்து நடுத் தெருவில் பல குடும்பங்கள் நின்றன. இத்துயரத்தை மனிதநேயம் படைத்த எவராலும் தாங்கிக் கொள்ள முடியவில்லை. நம்மால் முடிந்த அளவு உதவிகளை செய்தோம். அரசு உத்தியோகத்தில் பணிபுரிந்தவர்கள் தங்கள் சம்பளத்தில் ஒரு பகுதியை இதற்காக ஒதுக்கினார்கள். 

பல அமைப்புகள் களமிறங்கி மக்களிடத்தில் வசூல் செய்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனுப்பி வைத்தன. இந்த உதவிகள் அனைத்தும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு காயத்தில் போடப்படும் களிம்புகளைப் போல் உதவின. இந்நிகழ்வுகள் நமக்குத் தரும் பாடம் என்னவென்றால் ஒருவன் எல்லாவற்றையும் இழந்து நிள்றாலும் அவனைக் காப்பதற்கு சில மனிதர்கள் இருப்பார்கள். அவன் மேலும் இந்த உலகத்தில் தன் வாழ்க்கையைத் தொடர முடியும் என்பதாகும். 

அதே நேரத்தில் இதே சம்பவத்தை வேறொரு கோணத்தில் நீங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சியதைப் போல் சுனாமியி­ருந்து தப்பித்து காப்பாற்றும் படி வேண்டிக் கொண்டிருந்த இளம் பெண்களைக் கற்பழித்து கொன்ற மனிதநேயம் அற்றவர்களையும் இந்த சுனாமி அடையாளம் காட்டியது.

ஒரு பக்கம் சுனாமியின் அட்டகாசம் மறுபக்கம் இந்தக் கல்நெஞ்சக் காரர்களின் அட்டகாசம். ஈவு இரக்கம் கொஞ்சம் கூட இல்லாமல், இறந்து கிடக்கும் பிணங்களின் நகைகளைத் திருடினார்கள். கையில் போட்டிருந்த மோதிரத்தைக் கழற்ற முடியாத போது விரலோடு சேர்த்து வெட்டி எடுத்தார்கள் கல்நெஞ்சக்காரர்கள். மக்களிடம் வசூ­த்த பணத்தை உரியவர்களிடத்தில் கொடுக்காமல் சுருட்டிக் கொள்ளவும் செய்தார்கள்.

தன்னுடைய கவனக் குறைவால் எதிரில் வந்த வாகனத்தின் மீது ஒருவர் மோதி விடுகிறார். இப்போது மனிதநேயம் அற்றவர்கள், காயப்பட்டு உயிருக்கு போராடுபவர்களைக் காப்பாற்றுவதற்காக முயற்சிக்காமல் எப்படியாவது இதி­ருந்து நாம் தப்பிக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். உயிர் என்று கூடப் பாராமல் அது துடிப்பதைப் பார்த்து விட்டு ஓடி விடுகிறார்கள்.

அதைக் கடந்து செல்பவர்களாவது அவர்களுக்கு உதவுவார்களா என்றால் இல்லை. இவரை நாம் காப்பாற்றச் சென்று இவர் இறந்து விட்டால் நாம் தான் காவல் நிலையத்திற்கு அலைய வேண்டும் என்று நினைத்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். தன்னுடைய நலனைப் பார்க்கிறார்களே தவிர பிறர் நலம் பேணுவதில்லை. 

மனிதநேயமற்ற பட்டதாரிகள்

படிக்காதவனிடத்தில் இருக்கும் மனிதநேயத்தை விட படித்தவனிடத்தில் அதிகம் மனிதநேயம் இருக்க வேண்டும். ஆனால் இதற்கு நேர் மாற்றமாகத் தான் பட்டதாரிகளின் நிலை உள்ளது. கல்லூரிகளில் பழைய மாணவர்கள் புதிய மாணவர்களைக் கே­ செய்கிறார்கள். அவர்கள் மனம் புண்படும்படியாகப் பேசுகிறார்கள். அரை நிர்வாணமாக கல்லூரியை சுற்றச் சொல்கிறார்கள். இன்னும் இதுபோன்று நிறையக் கொடுமைகள் நடக்கின்றன.

மக்களுக்கு மனிதநேயத்தை கற்றுக் கொடுக்க வேண்டிய இவர்கள் இப்படி மனிதநேயம் அற்று நடக்கிறார்கள். இதற்காகத் தான் இவர்கள் படித்தார்களா? கல்வியின் நோக்கம் என்னவோ அதைக் குழிதோண்டிப் புதைக்கும் வகையில் இவர்களுடைய செயல்பாடுகள் அமைந்திருக்கின்றன.

மருத்துவர் நோயாளிகளிடம் கூறும் கனிவான வார்த்தைகள் பாதி நோயைக் குணப்படுத்தி விடும். ஆனால் இன்று மனிதநேயம் இல்லாத சில மருத்துவர்கள் நோயாளிகளைக் குணப்படுத்தும் நோக்கில் மருத்துவமனைகளைக் கட்டாமல் அவர்களிடமிருந்து பணம் பறிக்கும் எண்ணத்தில் கட்டுகிறார்கள்.

ஆத்திர அவசரத்திற்கு வேறு வழி இல்லாமல் தனியார் மருத்துவ மனைகளில் வந்து நோயாளிகளைச் சேர்த்து விடுகிறார்கள். இதைப் பயன்படுத்திக் கொண்டு ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை ஆயிரம், பத்தாயிரம் என்று பில்லை சரமாரியாக அனுப்பிக் கொண்டே இருக்கிறார்கள். இந்த மருத்துவர்கள் மருத்துவப் படிப்பை இவ்வாறு கொள்ளையடிப்பதற்காகத் தான் படித்தார்களா? எவ்வளவு தான் படிப்பு இருந்தாலும் மனிதநேயம் இல்லாவிட்டால் அவன் மிருகத்தைப் போன்று ஆகிவிடுவான் என்பதை இவர்களுடைய செயல் உணர்த்துகிறது.

பிற்படுத்தப்பட்டவர்களுக்காக அரசு உயர்கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீட்டிற்கு ஏற்பாடு செய்யும் எண்ணத்தில் உள்ளது. நியாயமான சிந்தனையுடைய எவரும் இதைத் தவறு என்று சொல்ல மாட்டார்கள். ந­வடைந்தவர்கள் வ­மையான வர்களுடன் போட்டிப் போட இயலாது. ஒரு பேருந்தில் எல்லோரும் சமமாக நடத்தப்படுவது கிடையாது. பலம் குன்றிய முதியவர்கள், பெண்கள், ஊனமுற்றவர்கள் ஆகியோர்களுக்காக தனியாக இடம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. 

இவர்களுடைய இடத்தில் மற்றவர்கள் யாரும் அமர முடியாது. இப்படி இடம் ஒதுக்குவது தவறு என்று சொன்னால் நிச்சயமாக அவர் மனிதநேயம் அற்றவராகத் தான் இருப்பார். தான் நன்றாக அரசுப் பதவிகளில் இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்களே தவிர எல்லோரும் நன்றாக வாழ வேண்டும் என்று எண்ணுவதில்லை. மருத்துவத்தைப் படித்தவர்கள் கூட இதை விளங்கிக் கொள்ளவில்லை.

மனிதநேயம் இல்லாமல் போனால் மனிதன் மனிதனாக மதிக்கப்பட மாட்டான். நிம்மதியாக நாம் வாழ முடியாது என்பதை தெள்ளத்தெளிவாக இந்நிகழ்வுகள் எடுத்துக்காட்டுகின்றன. மொத்தத்தில் மனிதநேயத்தினால் உலகத்திற்கு மாபெரும் நன்மை உண்டு என்பதைச் சந்தேகத்திற்கு இடமின்றி அறிகிறோம்.

பொதுவாக இஸ்லாமிய மார்க்கம் மனித சமுதாயத்திற்குப் பலன் தரக் கூடியது ஏதேனும் இருந்தால் அதைப் பற்றி வலுயுறுத்தாமல் இருக்காது. அதே போல் மனிதர்களுக்குத் தீமை தரக் கூடியது ஏதேனும் இருந்தால் அதை எச்சரிப்பதில் இஸ்லாத்தை மிஞ்சுவதற்கு உலகில் எதுவும் இல்லை. மனித நேயத்தினால் உலகத்திற்கு மாபெரும் நன்மை இருக்கிறது என்றால் இஸ்லாம் அதைப் பற்றி பேசாமல் இருக்குமா என்ன? இதோ இஸ்லாம் கூறும் மனிதநேயத்தைப் பாருங்கள்.

இஸ்லாமும் மனிதநேயமும்

மனிதர்களுக்கு நாம் உதவி செய்வதை இறைவனுக்கு உதவி செய்வதைப் போன்றும், மனிதனுக்கு நாம் இரக்கம் காட்டாவிட்டால் இறைவனை வெறுத்துத் தள்ளியதைப் போன்றும் இறைவன் எடுத்துக் கொள்கிறான். இதை உணராத மக்கள் செல்வங்களை உண்டிய­ல் போடுகிறார்கள். பிச்சைக்காரனாக இருந்தாலும் அவனிடத்திலும் மனித நேயத்துடன் நடக்க வேண்டும் என்று இஸ்லாம் நமக்குக் கற்றுத் தருகிறது. ஏழைக்கு உதவுவது இறைவனுக்கு உதவுவதைப் போன்றது என்று இஸ்லாம் நமக்கு பின்வரும் செய்தியின் மூலம் உணர்த்துகிறது. 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: கண்ணியமும் மகத்துவமும் மிக்க அல்லாஹ் மறுமை நாளில், ''ஆதமுடைய மகனே! நான் நோய்வாய்ப்பட்டிருந்தேன். ஆனால் நீ என்னை நலம் விசாரிக்க வரவில்லை'' என்று கூறுவான். அதற்கு அவன், ''என் இறைவா! நீ அகிலத்தின் இறைவன். உன்னை நான் எப்படி நலம் விசாரிக்க முடியும்?'' என்று கேட்பான். அதற்கு அல்லாஹ், ''என்னுடைய இந்த அடியான் நோய்வாய்ப்பட்டிருந்தான். ஆனால் நீ அவனை நலம் விசாரிக்கச் செல்லவில்லை. அவனை நீ நலம் விசாரித்திருந்தால் அங்கே நீ என்னைக் கண்டிருப்பாய் என்பது உனக்குத் தெரியாதா? ஆதமுடைய மகனே! நான் உன்னிடத்தில் உணவு வேண்டினேன். ஆனால் நீ எனக்கு உணவு அளிக்கவில்லை'' என்று கூறுவான். அதற்கு அவன், ''என் இறைவா! நீயோ அகிலத்தின் இறைவனாக இருக்க உனக்கு எப்படி என்னால் உணவளிக்க முடியும்?'' என்று கேட்பான். அதற்கு அல்லாஹ், ''என்னுடைய இந்த அடியான் உன்னிடத்தில் உணவு வேண்டி வந்தான். ஆனால் அவனுக்கு நீ உணவு கொடுக்கவில்லை. அவனுக்கு நீ உணவளித்திருந்தால் எனக்கு இதைச் செய்ததாகக் கண்டிருப்பாய் என்பது உனக்குத் தெரியாதா?

ஆதமுடைய மகனே! நான் உன்னிடத்தில் தண்ணீர் கேட்டேன். ஆனால் நீ எனக்குத் தண்ணீர் கொடுக்கவில்லை'' என்று கூறுவான். அதற்கு அவன், ''என் இறைவா! நீயோ அகிலத்தின் இறைவனாக இருக்க உனக்கு எப்படி நான் தண்ணீர் கொடுக்க முடியும்? என்று கேட்பான். அதற்கு அல்லாஹ், ''என்னுடைய இந்த அடியான் உன்னிடத்தில் தண்ணீர் கேட்டான். ஆனால் நீ அவனுக்குத் தண்ணீர் கொடுக்கவில்லை. அவனுக்கு நீ தண்ணீர் கொடுத்திருந்தால் அதை எனக்குக் கொடுத்ததாக நீ கண்டிருப்பாய்'' என்று கூறுவான். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ர­லி) நூல்: முஸ்­லிம் (4661)

பாதையில் துன்பம் தரக் கூடிய பெரிய கல்லோ அல்லது முள்ளோ அல்லது கண்ணாடிச் சில்லோ கிடந்தால் அதை நாம் அகற்ற வேண்டும். ஆனால் இவற்றை நம் கண்ணால் பார்த்தும் கூட அதைக் கண்டு கொள்ளாமல் சென்று விடுகிறோம்.

சிலர் அவற்றால் காயப்படுவார்கள். அதன் பின்பாவது அவர்களுக்குப் புத்தி வருமா என்றால் வராது. கல்­ல் இடித்து விட்டு காலைத் தடவி விட்டுச் செல்வார்களே தவிர அதை அகற்ற முன்வர மாட்டார்கள்.

சிலர் புகை பிடித்து விட்டு நெருப்புக்கங்கை அணைக்காமல் அப்படியே தெருவில் போட்டு விடுகிறார்கள். செருப்பு போடாத சிறுவர்கள் அதை மிதித்து, துடிதுடித்துப் போகிறார்கள். எனவே இஸ்லாம் மனிதநேயத்தைக் கருதி, பாதையில் கிடக்கும் இடையூறு அளிக்கும் பொருட்களை அகற்றுவது ஈமானில் ஒரு பகுதி என்று கூறுகிறது. அல்லாஹ்வை நம்பியவர்களிடத்தில் அவசியம் இச்செயல் இருக்க வேண்டும் என்று வ­யுறுத்துகிறது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஈமான் என்பது எழுபதுக்கும் அதிகமான கிளைகளாகும். அவற்றில் உயர்ந்தது வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை என்று கூறுவதாகும். அவற்றில் கடைசி நிலை, பாதையில் கிடக்கும் நோவினை தரக்கூடியவற்றை அகற்றுவதாகும். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ர­லி) நூல்: முஸ்­லிம் (51)

அழகிய முன்மாதிரி

நம்முடைய உயிரிலும் மேலான நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மனித நேயத்தின் தந்தையாகத் திகழ்ந்து, நாம் அனைவரும் மனிதநேயத்துடன் வாழ வேண்டும் என்பதற்கு அழகான முன்மாதிரியாக வாழ்ந்து சென்றிருக் கிறார்கள். அவர்களது வாழ்நாளில் நடந்த பின்வரும் சம்பவம் நம் மனதை நெகிழச் செய்கிறது.

(ஒரு நாள்) நாங்கள் முற்பகல் நேரத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் இருந்தோம். அப்போது செருப்பணியாத (அரை) நிர்வாணிகளாய் வட்டமாய் கிழிந்த கம்பளி ஆடை அல்லது நீளங்கி அணிந்த ஒரு கூட்டத்தார் தம் (கழுத்துகளில்) வாட்களைத் தொங்க விட்டவர்களாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தார்கள். அவர்களில் பெரும்பாலானோர் முளர் குலத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தனர்.

அவர்களுடைய ஏழ்மையைக் கண்ட அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் முகம் நிறம் மாறிவிட்டது. உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஒரு வித தவிப்பு நிலையுடன்) வீட்டுக்குள் சென்று விட்டு வெளியே வந்து பிலால் (ர­லி) அவர்களிடம் உத்தரவிட, பிலால் (ர­லி) அவர்கள் தொழுகை அறிவிப்புச் செய்து இகாமத்தும் கூறினார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுது விட்டு மக்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். அப்போது, ''மக்களே! உங்களை ஒரே ஆன்மாவி­ருந்து படைத்த உங்கள் இறைவனைப் பயந்து கொள்ளுங்கள்'' எனும் (4:1) இறை வசனத்தை முழுமையாக ஓதிக் காட்டினார்கள். மேலும் அல்ஹஷ்ர் என்ற அத்தியாயத்திலுள்ள ''நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். ஒவ்வொரு ஆன்மாவும் நாளைக்கென்று தாம் எதை முற்படுத்தியுள்ளோம் என்பதை பார்த்துக் கொள்ளட்டும். அல்லாஹ்விற்கு அஞ்சுங்கள்'' எனும் (59:18)வது வசனத்தையும் ஓதிக்காட்டி (முளர் கூட்டத்தாருக்கு தர்மம் செய்யுமாறு கூறி)னார்கள். 

அப்போது பேரீச்சம் பழத்தின் ஒரு துண்டையேனும் (தர்மம் செய்யுமாறு அறிவுறுத்தினார்கள்) உடனே (நபித்தோழர்களில்) ஒவ்வொருவரும் தம்மிடமிருந்த பொற்காசுகளி­ருந்தும் வெள்ளிக் காசுகளி­ருந்தும் ஆடைகளி­ருந்தும் ஒரு ஸாஉ கோதுமையி­ருந்தும் ஒரு ஸாஉ பேரீத்தம் பழத்தி­ருந்தும் தர்மம் செய்தார்கள்.

அப்போது அன்சாரிகளில் ஒருவர் பை (நிறையப் பொருட்களைக்) கொண்டு வந்தார். அதைத் தூக்க முடியாமல் அவரது கை திணறியது. ஏன்? தூக்கவே முடியவில்லை. பின்னர் தொடர்ந்து மக்கள் (தங்களின் தர்மப் பொருட்களுடன்) வந்து கொண்டு இருந்தனர். இறுதியில் உணவுப் பொருட்களாலும் ஆடைகளாலும் இரு குவியல்கள் சேர்ந்து விட்டதை நான் கண்டேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் முகம் பொன்னைப் போன்று மின்னிக் கொண்டிருப்பதையும் கண்டேன். அறிவிப்பவர்: ஜரீர் பின் அப்தில்லாஹ்(ர­லி) நூல்: முஸ்லி­ம் (1691)

இச்சம்பவம் நபி (ஸல்) அவர்களிடத்திலும் அவர்களுடைய தோழர்களிடத்திலும் இருந்த மனித நேயத்தை தெளிவாக எடுத்துரைக்கிறது. வறுமையால் பீடிக்கப்பட்ட அந்த மக்களைப் பார்த்த உடன் பெருமானாரின் முகம் மாறி அவர்கள் தவித்ததும் பொருட்கள் குவிந்த பின்பே அவர்களுடைய முகத்தில் மகிழ்ச்சி தென்பட்டதும் அவர்களிடத்தில் அளவில்லா மனிதநேயம் இருப்பதைக் காட்டுகிறது.

இன்றைக்கு எத்தனையோ நாடுகளில் வாழும் மக்கள் உணவுக்கு வழியில்லாமல் வாடிக் கொண்டு இருக்கிறார்கள். பசிக் கொடுமையினால் சாகவிருக்கும் ஒரு சிறுவனைத் திண்பதற்குக் கழுகு காத்திருந்த சம்பவம் கொடிய நெஞ்சம் படைத்தவர்களின் உள்ளத்தைக் கூட கரையச் செய்து விடும். செல்வாக்கில் உயர்ந்து நிற்கின்ற மேலை நாடுகள் தங்களுடைய தேவைக்குப் போக டன் கணக்கில் பாலையும் மாவையும் வீணாகக் கட­ல் சென்று கொட்டுகிறார்கள். லாரி லாரியாக தக்காளிகளையும் திராட்சைகளையும் கொண்டு வந்து மகிழ்ச்சி என்ற பெயரில் எறிந்து விளையாடுகிறார்கள்.

உலகத்தில் கிடைக்கின்ற எல்லாப் பழங்களையும் ஓரிடத்தில் ஒன்று சேர்த்து, அதில் குரங்குகளை விட்டு அவை அவற்றை நாசப்படுத்துவதைப் பார்த்து பூரிப்படைகிறார்கள். ஒரு பக்கம் உணவு இல்லாமல் மனிதஉயிரினம் வாட, ஆடம்பரப் பிசாசுகள் இப்படி வீண் விரயம் செய்கிறார்கள்.
உண்மையில் மனிதநேயம் இருந்தால் இது போன்று இவர்கள் செய்வார்களா? அரும்பாடு பட்டாவது பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவாமல் இருப்பார்களா? நபி (ஸல்) அவர்கள் காட்டிய இந்த மனிதநேயத்தைப் போல் இவர்களிடமும் இருந்தால் இவர்கள் இப்படி உணவுப் பொருட்களை வீணாக்குவார்களா? உலகம் இதைத் தீவிரமாகக் கண்காணிக்கக் கடமைப் பட்டிருக்கிறது.

எதிரிகளிடத்தில் மனிதநேயம்

பொதுவாக மனிதநேயம் என்பது இஸ்லாத்தை ஏற்றவர்களிடத்திலும் ஏற்காதவர்களிடத்திலும் இருக்கிறது. நம்மில் பெரும்பாலானோர் நம்மை எதிர்க்காத, நமக்குத் துன்பம் தராத ஒருவரிடத்தில் தான் மனிதநேயத்துடன் நடந்து கொள்வோம். ஆனால் இஸ்லாம் பரம எதிரியிடத்தில் கூட மனித நேயத்துடன் நடக்க வேண்டும் என்று கூறுகிறது. இது தான் இஸ்லாம் கூறும் மனிதநேயத்திற்கும் மற்றவர்கள் கூறும் மனித நேயத்திற்கும் உள்ள வித்தியாசம்.

ஒரு கிராமவாசி நபி (ஸல்) அவர்கள் தொழும் பள்ளிவாச­ல் நின்று கொண்டு சிறுநீர் கழிக்க ஆரம்பித்தார். இதைப் பார்த்த அவர்களது தோழர்கள், ''நிறுத்து, நிறுத்து'' என்று கூறி, தடுக்க முற்பட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் தமது தோழர்களைப் பார்த்து, ''அவர் சிறுநீர் கழிக்க இடையூறாக இருக்காதீர்கள். அவரை விட்டு விடுங்கள். அவர் சிறுநீர் கழித்து முடிக்கட்டும்'' என்று கூறி விட்டு, ஒரு வாளி தண்ணீரைக் கொண்டு வந்து அவர் சிறுநீர் கழித்த இடத்தில் ஊற்றும்படி கட்டளையிட்டார்கள். அந்தக் கிராமவாசி சிறுநீர் கழித்த பின்பு நபியவர்கள் அவரை அழைத்து ''பள்ளிவாசல்களில் அசுத்தம் செய்யக் கூடாது. இங்கு இறைவனை நினைக்க வேண்டும். தொழ வேண்டும். குர்ஆன் ஓத வேண்டும்'' என்று கூறி உபதேசம் செய்தார்கள். அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக்(ர­லி) நூல்: முஸ்­லிம் (429)

இன்றைக்கு யாராவது ஒரு கோவி­லோ அல்லது சர்ச்சிலோ அல்லது பள்ளிவாச­லோ சென்று அந்த கிராமவாசி செய்தது போல செய்தால் அவர் உயிருடன் வெளியே வருவதில் சந்தேகம் தான். நாம் புனிதமாக மதிக்கும் ஆலயத்தை ஒருவர் அசுத்தம் செய்யும் போது யாரும் பொறுத்துக் கொண்டு இருக்க மாட்டோம். சஹாபாக்களும் கோபப்பட்டு அவரை அடிப்பதற்குச் சென்றார்கள். ஆனால் மனித நேயத்தின் மறுஉருவாய் திகழ்கின்ற நபி (ஸல்) அவர்கள் தமது தோழர்களைத் தடுத்தார்கள்.

நமது வீட்டை ஒருவர் அசுத்தம் செய்தால் அவரை நாம் அடிக்காமல் விட மாட்டோம். வீட்டை விடப் புனிதமான பள்ளிவாச­ல் ஒருவர் சிறுநீர் கழித்த போதும் கூட அவர் துன்புற்று விடக்கூடாது என்று நபிகள் நாயகம் நினைத்திருக்கிறார்கள் என்றால் இந்த மனித நேயத்தை வர்ணிக்க உலகில் வார்த்தைகள் உண்டா?

நபி (ஸல்) அவர்கள் உண்மை மார்க்கத்தை மக்களுக்கு எடுத்துச் சொன்ன போது அவர்களுக்கு அதிகமதிகம் எதிரிகள் இருந்தார்கள். பெருமானாரைத் துன்புறுத்தியதில் யூதர்களுக்கும் பங்கு உண்டு. ''அஸ்ஸலாமு அலைக்கும் (உங்கள் மீது சாந்தி உண்டாகட்டும்)'' என்று சொல்வதற்குப் பதிலாக, ''அஸ்ஸாமு அலைக்கும் (உங்களுக்கு மரணம் உண்டாகட்டும்)'' என்று நேருக்கு நேராக சபித்தவர்கள் அந்த யூதர்கள். நபி (ஸல்) அவர்கள் நம்பிக்கையானவர் என்று தெரிந்து கொண்டே அவர் நம் பொருளைப் பறித்து விடுவார் என்று கூறி மக்களிடத்தில் கேவலமாகப் பேசியவர்கள் அந்த யூதர்கள். என்றாலும் நபி (ஸல்) அவர்கள் யூதர்களிடத்தில் அன்போடு நடந்து கொண்டார்கள்.

நபி (ஸல்) அவர்களுக்குப் பணிவிடை செய்த யூத சிறுவன் ஒருவன் நோயுற்றான். எனவே அவனைப் பற்றி நலம் விசாரிப்பதற்காக அவனிடத்தில் வந்து அவனுடைய தலைக்கு அருகில் அமர்ந்தார்கள். அறிவிப்பவர்: அனஸ் (ரலி­) நூல்: புகாரி (1356)

நபி (ஸல்) அவர்களை ஒரு பிரேதம் கடந்து சென்றது. உடனே நபியவர்கள் எழுந்து நின்றார்கள். அப்போது அவர்களிடத்தில், ''இது ஒரு யூதனின் பிரேதம் (இதற்காகவா நீங்கள் எழுந்து நிற்கிறீர்கள்?)'' என்று கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள், ''அதுவும் ஒரு உயிர் தானே'' என்று கூறினார்கள். அறிவிப்பவர்: சஹ்ல் பின் ஹுனைஃப் மற்றும் கைஸ் பின் சஃத் (ர­லி) நூல்: புகாரி (1313)

நபி (ஸல்) அவர்கள் யூதன், கிறித்தவன் என்று பாராமல் மனிதன் என்று பார்த்துள்ளார்கள். உயிரை உயிராக மதிக்க வேண்டும் என்பதை அழுத்தம் திருத்தமாக இங்கு தெளிவு படுத்தியுள்ளார்கள். ஒரு துக்க கரமான காரியம் ஒன்று நடந்து கொண்டிருக்கும் போது நாம் அமர மாட்டோம். நபிகள் நாயகம் எழுதப்படிக்கத் தெரியாதவராக இருந்தாலும் மனிதநேயத்தைக் கடைப் பிடிப்பதில் படித்தவர்களுக்குக் கற்றுத் தரும் ஆசானாகத் திகழ்ந்துள்ளார்கள்.

போர்களத்தில் மனிதநேயம்

போர் என்று வந்து விட்டால் நாட்டில் அனைவரும் நிம்மதியின்றி தவிப்பதைப் பார்க்கின்றோம். இலங்கையில் நடக்கும் போரால் அங்கிருந்து ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் அகதிகளாக நம் நாட்டிற்கு வருகிறார்கள். இதற்குக் காரணம் போர் நடக்கும் போது அங்கு பெண்கள், முதியவர்கள், சிறுவர்கள் என்று பாராமல் சரமாரியாகத் தாக்குதல்கள் தொடுக்கப்படுவதாகும். போரின் போது யாரும் யார் மீதும் இரக்கப்பட மாட்டார்கள். இப்படித் தான் இன்று கூட நடந்து கொண்டிருக்கிறது.

ஆனால் இஸ்லாம், போரில் சிறுவர்களையும் பெண்களையும் கொல்லக் கூடாது என்று கட்டளையிடுகிறது. இன்றைக்கு நாட்டுக்குள் தாக்குதல் தொடுக்கப் படுவதைப் போல் அன்றைக்கு தாக்குதல்கள் தொடுக்கப்படவில்லை. போரிடும் இரு சாராரும் வெட்ட வெளிக்கு வந்து போரிட்டார்கள். இங்கு சிறுவர்களும் பெண்களும் ஏன் வர வேண்டும்? என்ற கேள்வி நியாயமாக இருந்தாலும் அவர்களை ஒன்றும் செய்யக்கூடாது என்று இஸ்லாம் கூறுகிறது. 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கலந்துகொண்ட ஒரு போரில் ஒரு பெண்மனி கொல்லப்பட்டுக் கிடந்தாள். எனவே நபி (ஸல்) அவர்கள் (போரில்) பெண்களையும் சிறுவர்களையும் கொல்வதை விட்டும் தடை செய்தார்கள். அறிவிப்பவர்: இப்னு உமர் (ர­லி) நூல்: புகாரி (3015)

தீங்கு செய்தோருக்கும் மனிதநேயம்

நிறைய இன்னல்களைக் கொடுத்த யூதர்களிடத்தில் நபி (ஸல்) அவர்கள் காட்டிய மனிதநேயத்திற்கு அளவே இல்லை. தீமை செய்தோருக்கும் நன்மை செய் என்று இறைவன் அவர்களுக்குக் கூறியதை முழுமையாகக் கடைப் பிடித்தார்கள்.

நன்மையும், தீமையும் சமமாகாது. நல்லதைக் கொண்டே (பகைமையை) தடுப்பீராக! எவருக்கும், உமக்கும் பகை இருக்கிறதோ அவர் அப்போதே உற்ற நண்பராகி விடுவார். (அல்குர்ஆன் 41:34)

ஒரு யூதப் பெண்மனி நபி (ஸல்) அவர்களைக் கொலை செய்ய வேண்டும் என்ற நோக்கில் விஷம் தோய்க்கப்பட்ட ஆட்டைக் கொண்டு வந்து கொடுத்தாள். நபி (ஸல்) அவர்களும் அதை உண்டு விட்டார்கள். இதையறிந்த சஹாபாக்கள் அப்பெண்மனியை நபியவர்களிடம் அழைத்து வந்து ''இவளை நாங்கள் கொன்று விடட்டுமா?'' என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் வேண்டாம் என்று கூறி விட்டார்கள். அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக்(ர­லி) நூல்: புகாரி 2617

அப்பெண்மனி வைத்த விஷத்தின் தாக்கம் நீண்ட நாட்கள் பெருமானாருக்குச் சிரமத்தை ஏற்படுத்தியது. அவர்கள் மாத்திரம் ஒரு கட்டளை போட்டிருந்தால் அப்பெண்ணை சஹாபாக்கள் கொன்றிருப்பார்கள். அவளைக் கொலை செய்தால் அதை யாரும் குற்றம் என்று கூறவும் மாட்டார்கள். என்றாலும் மனிதநேயம் அவர்களிடத்தில் மிகைத்திருந்ததால் தன்னைக் கொல்ல நினைத்தவளைக் கொலை செய்ய நபி (ஸல்) அவர்களின் உள்ளம் இடம் கொடுக்கவில்லை. இதே போன்று இன்னொரு சம்பவமும் அவர்கள் வாழ்க்கையில் ஏற்பட்டது.

நபி (ஸல்) அவர்கள் ஒரு போரை முடித்து விட்டுத் தம் தோழர்களுடன் வந்து கொண்டிருந்தார்கள். இளைப்பாறுவதற்காக ஒவ்வொருவரும் ஒரு மரத்தடியில் தங்கலானார்கள். நபி (ஸல்) அவர்கள் தனியாக சென்று ஒரு மரத்திற்கு அடியில் இளைப்பாறினார்கள்.

திடீரென்று ஒருவர் நபி (ஸல்) அவர்களைக் கொலை செய்வதற்காகத் தன் கையில் வாளை எடுத்துக் கொண்டு, ''முஹம்மதே! இப்போது உன்னை யார் காப்பாற்றுவார்?'' என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ''அல்லாஹ் காப்பாற்றுவான்'' என்று கூறினார்கள்.

பின்பு அவர் கையில் இருந்த வாள் கீழே விழுந்தவுடன் நபியவர்கள் அந்த வாளை எடுத்துக் கொண்டு, ''இப்போது உன்னை யார் காப்பாற்றுவார்? வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறேதுவும் கடவுள் இல்லை என்பதை ஒத்துக் கொள்கிறாயா?'' என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள்.

அதற்கு அவர், ''இல்லை! இதை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன். ஆனால் இனிமேல் உங்களுக்கு எதிராக நான் போரிட மாட்டேன் என்று உறுதிமொழி அளிக்கிறேன்'' என்றார். நபி (ஸல்) அவர்கள் அவரைத் தண்டிக்காமல் விட்டு விட்டார்கள். அவர் தன்னுடைய தோழர்களிடத்தில் சென்று, ''மக்களிலேயே மிகவும் சிறந்த ஒருவரிடமிருந்து நான் வந்திருக்கிறேன்'' என்று கூறினார். அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ர­லி) நூல்: அஹமத் 14401

கொலை செய்ய வந்தவரைத் தண்டிக்காமல் நபி (ஸல்) அவர்கள் மன்னித்து விட்டது அவர்களின் பரந்த மனப்பான்மையையும் அவர்கள் எதிரிகளிடத்தில் காட்டிய மனித நேயத்தையும் காட்டுகிறது.

அவர்கள் நினைத்திருந்தால் ஒரு சப்தமிட்டு அனைத்துத் தோழர்களையும் வரவழைத்து, அவரை ஒரு கை பார்த்திருக்கலாம். ஆனால் நபியவர்கள் அப்படிச் செய்யவில்லை. இஸ்லாத்தை அவர் ஏற்க மறுத்த போதிலும் அவரைத் தண்டிக்கவில்லை. இஸ்லாம் வாளால் பரப்பப்பட்ட மார்க்கம் என்று கூறுபவர்களுக்கு இது சாட்டையடியாக அமைந்துள்ளது.

தன்னை எதிர்ப்பவர்களை எதிர்த்துத் தான் இஸ்லாம் போரிட்டதே தவிர, போரில் ஈடுபடாத அப்பாவிகளைத் தாக்குவதை இஸ்லாம் விரும்பவில்லை.

உலகத்தையே ஆட்டிப் படைக்கின்ற அமெரிக்கா, ஈராக் நாட்டின் எதிரிகளை நடத்திய விதத்தைப் பார்த்து உலகம் முழுவதி­ருந்தும் எதிர்ப்பு கிளம்பியது. கொஞ்சம் கூட மனித உணர்வுகள் இல்லாமல் நாய்களை விட்டு வெறுமேனியில் அவர்களைக் கடிக்க விட்டது. இன்னும் மோசமான கொடுமைகளைச் செய்தது.

நபி (ஸல்) அவர்கள் மக்காவை வெற்றி கொண்ட போது அவர்களுடைய எதிரிகள் அனைவரும் அவர்கள் முன்னிலையில் நின்றார்கள். கருணை வடிவான நபி (ஸல்) அவர்கள் அவர்கள் அனைவருக்கும் மன்னிப்பு வழங்கி விட்டார்கள்.

நபி (ஸல்) அவர்களின் சிறிய தந்தையான ஹம்ஸா (ர­லி) அவர்களை வஹ்ஷீ என்ற கருப்புற நிற அடிமை கொன்றார். பெருமானாருக்கு விருப்பமாக இருந்த ஹம்ஸா (ர­லி) அவர்கள் கொலையுண்டதை அவர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

மக்காவை அவர்கள் கைப்பற்றிய போது வஹ்ஷீயும் பெருமானாருக்கு முன்னால் இருந்தார். நபி (ஸல்) அவர்கள் அவரைப் பார்த்து ''நீ தான் வஹ்ஷீயா? ஹம்ஸாவைக் கொன்றவர் நீ தானா?'' என்று கேட்டார்கள். அதற்கு அவர் ஆம் என்று கூறினார்.

வஹ்ஷீயைப் பார்க்கும் போதெல்லாம் ஹம்ஸா (ரலி­) அவர்களின் ஞாபகம் வந்ததால் அவரிடத்தில் நபி (ஸல்) அவர்கள், ''தயவு செய்து உங்கள் முகத்தை என்னிடத்தில் காட்டாமல் இருக்க முடியுமா?'' என்று பணிவுடன் வேண்டிக் கொண்டார்கள். இதன் பின்பு வஹ்ஷீ இஸ்லாத்தைத் தழுவிக் கொண்டார். அறிவிப்பவர்: உபைதுல்லாஹ் பின் அதீ நூல்: புகாரி 4072

நியாயத் தீர்ப்பும் மனிதநேயமும்

இன்றைக்கு நீதி என்பது அநீதியாக மாறிக் கொண்டிருக்கிறது. நீதி வழங்குவதாகக் கூறிக்கொண்டு தனக்குப் பிடித்தவருக்குச் சாதகமாகவும் பிடிக்காதவருக்கு எதிராகவும் தீர்ப்பு வழங்கப்படுகின்றது. வெறுப்பும் பகைமையும் நீதம் செலுத்த விடாமல் தடுத்து விடுகிறது. ஆனால் இஸ்லாம் பகைவர்களாக இருந்தாலும் அவர்களிடத்தில் மனிதநேயத்தை கருத்தில் கொண்டு நீதம் செலுத்த வேண்டும் என்று கட்டளையிடுகின்றது.

நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு, நீதிக்குச் சாட்சிகளாக ஆகிவிடுங்கள்! ஒரு சமுதாயத்தின் மீதுள்ள பகை நீங்கள் நீதியாக நடக்காம­ருக்க, உங்களைத் தூண்ட வேண்டாம். நீதியாக நடங்கள்! அதுவே இறையச்சத்திற்கு நெருக்கமானது. அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! அல்லாஹ் நீங்கள் செய்வதை நன்கறிந்தவன். (அல்குர்ஆன் 5:8)

நபி (ஸல்) அவர்களை வெறுத்தவர்கள் கூட நபியவர் களிடத்தில் வந்து தீர்ப்புக் கேட்டார்கள். அந்த மக்கள் நபி (ஸல்) அவர்களின் மீது வைத்திருந்த நம்பிக்கையே இதற்குக் காரணம். நபி (ஸல்) அவர்களும் யூதன், கிறிஸ்தவன், முஸ்லி­ம் என்று பார்க்காமல் மனித நேயத்துடன் நடந்து கொண்டார்கள். இதற்குப் பின்வரும் செய்தி சிறந்த சான்றாக உள்ளது.

யூதர் ஒருவர் (சந்தையில்) தம் சரக்கை எடுத்துக் காட்டிய போது மிகக் குறைந்த விலை அவருக்குக் கொடுக்கப்பட்டது. அதை அவர் விரும்பவில்லை. உடனே அவர் ''மனிதர்கள் அனைவரையும் விட (சிறந்தவராக) மூசாவைத் தேர்ந்தெடுத்துக் கொண்டவனின் மீது சத்தியமாக! (நான் இந்த விலையை வாங்கிக் கொள்ள) மாட்டேன்'' என்று கூறினார். இதை அன்சாரிகளில் ஒருவர் கேட்டு விட்டார். உடனே எழுந்து அந்த யூதரின் முகத்தில் அறைந்து, ''நபி (ஸல்) அவர்கள் நமக்கிடையே வாழ்ந்து கொண்டிருக்க மனிதர்கள் அனைவரையும் விட மூசாவைத் தேர்ந்தெடுத்துக் கொண்டவனின் மீது சத்தியமாக என்றா கூறுகிறாய்?'' என்று கேட்டார்.
அந்த யூதர் நபி (ஸல்) அவர்களிடம் சென்று, ''அபுல்காசிம் அவர்களே! (என் உயிர், உடைமை, மானத்தைப் பாதுகாப்பதாக) எனக்கு நீங்கள் பொறுப்பேற்று ஒப்பந்தம் செய்து தந்துள்ளீர்கள். என் முகத்தில் அறைந்தவரின் நிலை என்ன?'' என்று கேட்டார்.

நபி (ஸல்) அவர்கள் அந்த முஸ்லி­மை நோக்கி, ''நீ ஏன் இவருடைய முகத்தில் அறைந்தாய்?'' என்று கேட்டார்கள். அவர் விஷயத்தை நபி (ஸல்) அவர்களிடம் சொன்னார். உடனே நபி (ஸல்) அவர்களின் முகத்தில் கோபக்குறி தென்படுகின்ற அளவிற்கு அவர்கள் கோபமடைந் தார்கள். பிறகு ''அல்லாஹ்வின் நேசர்களுக்கிடையே ஏற்றத்தாழ்வு பாராட்டாதீர்கள்'' என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி­) நூல்: புகாரி 3414

யூதர் எடுத்து வைத்த குற்றச்சாட்டை ஏற்றுக் கொண்டு அந்த அன்சாரித் தோழரிடம், ஏன் அடித்தாய் என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டதும் பின்பு அவரைக் கண்டித்ததும் மாற்றார் களிடத்தில் பெருமானார் காட்டிய மனிதநேயத்தை எடுத்துரைக்கிறது.

அடிமைகளிடத்தில் மனிதநேயம்

இன்றைக்கு அடிமை நிலை இல்லாவிட்டாலும் சிலர் தங்களுக்குக் கீழ் பணிபுரியும் வேலையாட்களை அடிமைகளைப் போன்று தான் நடத்துகிறார்கள். வேலையாட்களை அடித்தும் கெட்ட வார்த்தைகளால் அவர்களைத் திட்டியும் துன்பம் கொடுக்கிறார்கள். தற்போது இதைத் தட்டிக் கேட்பதற்குப் பிறருக்கு உரிமையுள்ளது.

ஆனால் நபி (ஸல்) அவர்கள் காலத்தில் அடிமைகள் ஆடு, மாடுகளைப் போன்று நடத்தப் பட்டார்கள். மார்க்கெட்டில் காய்கறிகள் விற்கப்படுவதைப் போன்று அடிமைகள் விற்கப்பட்டார்கள். நம்முடைய ஆட்டை நாம் அறுத்தால், அடித்தால் யாரேனும் கேள்வி கேட்பார்களா? இல்லை. அதுபோல் ஒருவரது அடிமையை அவர் அடித்தால் அவரை எதிர்த்து எவரும் கேள்வி கேட்க முடியாது.

இப்படிப்பட்ட கொடூரமான காலத்தில் நபியாகத் தோன்றிய முஹம்மத் (ஸல்) அவர்கள், அடிமைகளும் மனிதர்கள் தான் என்பதை உலகிற்கு உணர்த்தினார்கள்.

அவர்களிடத்திலும் மனித நேயத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என்று கற்றுத் தந்தார்கள். அடிமைகளுக்குக் கொடுமைகள் இழைக்கப்படும் போதெல்லாம் அதை எதிர்த்துக் குரல் கொடுத்தார்கள். இதைப் பின்வரும் செய்திகள் உறுதிபடுத்தும்.

நான் ஒருவரை (அவருடைய தாயைக் குறிப்பிட்டு) ஏசி விட்டேன். அவர் நபி (ஸல்) அவர்களிடம் முறையிட்டார். நபி (ஸல்) அவர்கள் (என்னை நோக்கி) ''இவரது தாயாரைக் குறிப்பிட்டு நீர் குறை கூறினீரா?'' என்று கேட்டார்கள்.
பிறகு, ''உங்கள் அடிமைகள் உங்கள் சகோதரர்கள் ஆவார்கள். அவர்களை அல்லாஹ் உங்கள் ஆதிக்கத்தின் கீழ் ஒப்படைத்துள்ளான். ஆகவே எவருடைய ஆதிக்கத்தின் கீழ் அவருடைய சகோதரர் இருக்கிறாரோ அவர் தன் சகோதரருக்குத் தான் உண்பதி­ருந்து உண்ணத் தரட்டும். தான் உடுத்துவதி­ருந்தே உடுத்தத் தரட்டும். அவர்களின் சக்திக்கு மீறிய வேலைப் பளுவை அவர்கள் மீது சுமத்தாதீர்கள். அப்படியே அவர்களின் சக்திக்கு மீறிய வேலைப் பளுவை அவர்கள் மீது நீங்கள் சுமத்தினால் (அதை நிறைவேற்றிட) அவர்களுக்கு உதவுங்கள்'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூதர் (ரலி­) நூல்: புகாரி 2545

நபி (ஸல்) அவர்கள் கூறியதாவது: உங்களில் ஒருவரிடம் அவருடைய பணியாள் அவரது உணவைக் கொண்டு வந்தால் அவர் அப்பணியாளனைத் தம்முடன் (உட்கார வைத்துக் கொள்ளட்டும். அவ்வாறு) உட்கார வைக்க வில்லையென்றாலும் அவருக்கு ஒரு கவளம் அல்லது இரு கவளங்கள் அல்லது ஒரு வாய் அல்லது இரு வாய்கள் கொடுக்கட்டும். ஏனெனில் அதைத் தயாரிக்க அந்தப் பணியாள் பாடுபட்டிருப்பார். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி 2557

நாகரீகம் வளர்ந்து சமத்துவம் பேசப்படுகின்ற இந்தக் காலத்தில் கூட நபி (ஸல்) அவர்கள் சொல்­த் தந்த மனிதநேயம் கடைபிடிக்கப்படுவதில்லை. ஆனால் எஜமான் எதை உண்கிறாரோ, எதை உடுத்துகிறாரோ அதையே தன் அடிமைக்கு உண்ணக் கொடுக்கட்டும் உடுத்தக் கொடுக்கட்டும் என்று அன்றைக்கே நபி (ஸல்) அவர்கள் சொல்­யிருக்கிறார்கள் என்றால் இதை விட பெரிய மனிதநேயம் யாரிடத்தில் இருக்க முடியும்?

ஆன்மீகத்தில் மனிதநேயம்

இஸ்லாம் எல்லா நிலைகளிலும் மனிதநேயத்தைக் கடைப்பிடிக்கிறது. ஆன்மீகத்தில் கூட மனிதநேயத்துடன் நடந்து கொள்கிறது. இன்றைக்கு ஆண்மீகம் என்ற பெயரில் காட்டுமிராண்டித்தனமான இறை வழிபாடுகள் தினந்தோறும் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. மொட்டைத் தலையில் தேங்காயை உடைப்பதை இறைவன் விரும்புகிறான் என்று நினைக்கின்றனர். மண்டை உடைந்து இரத்தம் பீறிட்டு வருவதைப் பார்த்தும் அர்ச்சகருக்கு இரக்கம் வரவில்லை.

கடவுளுக்காக வெறுமேனியில் சாட்டையைக் கொண்டு அடித்துக் கொள்கிறார்கள். நெருப்பில் குதித்து காலைப் புண்ணாக்கிக் கொள்கிறார்கள். கடவுளை நெருங்க வேண்டும் என்பதற்காகத் தன்னைத் தானே துன்புறுத்திக் கொள்வதை இஸ்லாம் ஒரு போதும் விரும்பவே விரும்பாது. ஆன்மீகத்தையும் மனிதநேயப் பார்வையுடன் பார்க்கிறது. எனவே தான் இதுபோன்ற வழிபாடுகளுக்கு இஸ்லாத்தில் அறவே அனுமதியில்லை.

நபி (ஸல்) அவர்கள் உரை நிகழ்த்திக் கொண்டிருந்த போது ஒரு மனிதர் நின்று கொண்டிருப்பதைக் கண்டார்கள். எனவே அவரைப் பற்றி (மக்களிடத்தில்) விசாரித்தார்கள். மக்கள், ''அவர் அபூஇஸ்ராயீல் ஆவார். உட்காராமல் வெயி­ல் நிற்பதாகவும் பேசாமல் இருப்பதாகவும் நோன்பு வைப்பதாகவும் அவர் நேர்ச்சை செய்துள்ளார்'' என்று கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ''அவரை பேசச் சொல்லுங்கள். அவர் நிழ­ல் வந்து அமரட்டும். நோன்பை (மட்டும்) பூர்த்தி செய்யட்டும்'' என்று கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ர­லி) நூல்: புகாரி 6704

இந்தச் செய்தி ஆன்மீகம் என்ற பெயரில் தன்னைத் தானே துன்புறுத்திக் கொள்ளக் கூடாது என்பதை தெளிவாக எடுத்துரைக்கிறது. ஆன்மீகத்தில் தன்னை இணைத்துக் கொண்டு மாபெரும் மகானாக ஆக வேண்டும் என்றால் திருமணம் செய்து கொள்ளக் கூடாது என்று சிலர் நினைக்கிறார்கள். சாதாரண மனிதனுக்கு இருக்கின்ற ஆசைகள் அவனிடத்தில் இருக்கக் கூடாது என்று எண்ணுகிறார்கள்.

ஆனால் இஸ்லாம் மனித நேயத்திற்கு அப்பாற்பட்ட மார்க்கம் அல்ல என்பதால் அவசியம் திருமணம் செய்ய வேண்டும் என்று கூறுகிறது. பின்வரும் சம்பவம் ஆன்மீகத்தில் நபி (ஸல்) அவர்கள் காட்டிய மனித நேயத்தைத் தெளிவாகக் காட்டுகிறது.

நான் எங்கள் கூட்டத்தினர் சிலருடன் நபி (ஸல்) அவர்களிடம் வந்தேன். அவர்களுடன் இருபது நாட்கள் தங்கியிருந்தோம். அவர்கள் இரக்க குணமுடையவராகவும் மென்மையானவர்களாகவும் இருந்தார்கள். எங்கள் குடும்பத்தாரிடம் நாங்கள் செல்ல வேண்டும் என்ற எங்கள் ஆர்வத்தைக் கண்ட நபி (ஸல்) அவர்கள், ''நீங்கள் சென்று அவர்களுடன் தங்கி அவர்களுக்கு மார்க்கத்தைக் கற்றுக் கொடுங்கள். தொழுங்கள். தொழுகையின் நேரம் வந்து விடுமானால் உங்களில் ஒருவர் பாங்கு சொல்லட்டும். உங்களில் பெரியவர் இமாமாக இருக்கட்டும்'' என்று கூறினார்கள். அறிவிப்பவர்: மா­க் பின் ஹுவைரிஸ் (ர­லி) நூல்: புகாரி 628

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீண்ட நேரம் தொழுவிக்கும் எண்ணத்துடன் நான் தொழுகையைத் துவக்குகின்றேன். அப்போது குழந்தையின் அழுகுரலை நான் கேட்கின்றேன். (எனக்குப் பின்னால் தொழுது கொண்டிருக்கும்) அந்தக் குழந்தையின் தாயாருக்குச் சிரமமளிக்கக் கூடாது என்பதினால் தொழுகையை சுருக்கமாக முடித்து விடுகிறேன். அறிவிப்பவர்: அபூகதாதா (ரலி­) நூல்: புகாரி 707

மக்களிடத்தில் மனிதநேயம்

இத்தகைய அரும்பெரும் மார்க்கத்தைப் பெற்றும் கூட சில இஸ்லாமியப் பெயர் தாங்கிகள் நடத்தும் கொடூரத் தாக்குதல்களினால் இஸ்லாத்திற்குக் களங்கம் ஏற்பட்டு விடுகின்றது. இஸ்லாமியப் பெயர் தாங்கிகளான இவர்கள் மருத்துவ மனைகளிலும் மக்கள் கூடும் மார்க்கெட்டுகளிலும் ஈவு இரக்கமின்றி குண்டுகளை வைத்து விடுகின்றார்கள். இதைப் பார்ப்பவர்கள், இஸ்லாம் தீவிரவாதத்தைப் போதிக்கின்ற மார்க்கம் என்று தவறாக எண்ணி விடுகிறார்கள்.

ஒரு அயோக்கியன் செய்யும் குற்றத்திற்கு அவன் தான் பொறுப்பாளியே தவிர அவன் சார்ந்துள்ள மதமோ, இனமோ அல்ல. என்னருமை மாற்று மத அன்பர்களே! உங்களிடத்தில் நாங்கள் ஒன்றை கூறிக் கொள்கிறோம். இஸ்லாமியர்களின் செயல்பாடுகளைப் பார்த்து இஸ்லாத்தைப் புரிந்து கொள்ளாதீர்கள். இஸ்லாம் என்ன சொல்கிறது என்று சிந்தியுங்கள். தீவிரவாதத்தை இஸ்லாம் கண்டிப்பதைப் போல் எந்த மதமும் கண்டிக்கவில்லை.

மனிதநேயம் இல்லாமல் ஒருவன் செயல்பட்டால் அவன் முஸ்­மாக இருந்தாலும் இஸ்லாம் அவனை ஒருபோதும் அங்கீகரிக்காது. அவன் ஆயிரம் காரணங்களைக் கூறினாலும் அப்பாவி மக்களைக் கொன்றதற்கு நிச்சயம் அவன் இறைவனிடத்தில் பதில் சொல்­யே ஆக வேண்டும்.

ஒரு உயிரை அநியாயமாகப் பறிக்கும் அதிகாரத்தை இஸ்லாம் யாருக்கும் வழங்கவில்லை. அப்படி அவன் பறித்தால் அவனுக்கு இறைவன் விடும் எச்சரிக்கையைப் பாருங்கள்.

கொலைக்குப் பதிலாகவோ, பூமியில் செய்யும் குழப்பத்திற்குப் பதிலாகவோ இல்லாமல் ஒருவர், மற்றொருவரைக் கொலை செய்தால் அவர் எல்லா மனிதர் களையும் கொலை செய்தவர் போலாவார். ஒரு மனிதனை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழ வைத்தவர் போலாவார். (அல்குர்ஆன் 5:32)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மக்களுக்கு இரக்கம் காட்டாதவனுக்கு அல்லாஹ் இரக்கம் காட்டமாட்டான். அறிவிப்பவர்: ஜரீர் பின் அப்தில்லாஹ்(ர­லி) நூல்: புகாரி 7376

இஸ்லாம் ஒரு படி மேலே சென்று மனிதர்களிடம் நேயத்துடன் நடப்பதைப் போல மிருகத்திடமும் நேயத்துடன் நடக்கச் சொல்கிறது. அவைகளிடத்தில் நன்முறையில் நடந்து கொண்டால் இறைவன் அதற்காகவும் சுவனம் என்ற நற்கூ­லியை நமக்குப் பரிசாகத் தருகின்றான்.

''ஒரு மனிதர் பாதையில் நடந்து சென்று கொண்டிருந்த போது அவருக்குக் கடுமையான தாகம் ஏற்பட்டது. உடனே, அவர் (அங்கிருந்த) ஒரு கிணற்றில் இறங்கி, அதி­ருந்து (தண்ணீரை அள்ளிக்) குடித்தார். பிறகு கிணற்றி­ருந்து அவர் வெளியே வந்த போது நாய் ஒன்று தாகத்தால் தவித்து, நாக்கைத் தொங்க விட்டபடி ஈர மண்ணை நக்கிக் கொண்டிருப்பதைக் கண்டார். அவர் (தம் மனதிற்குள்) ''எனக்கு ஏற்பட்டதைப் போன்றே இந்த நாய்க்கும் (கடுமையான தாகம்) ஏற்பட்டிருக் கின்றது போலும்'' என்று எண்ணிக் கொண்டார். உடனே, (மீண்டும் கிணற்றில் இறங்கி, தண்ணீரைத்) தனது காலுறையில் நிரப்பிக் கொண்டு, அதை வாயால் கவ்விக் கொண்டு, மேலே ஏறி வந்து அந்த நாய்க்கும் புகட்டினார். அல்லாஹ் அவருடைய இந்த நற்செயலை ஏற்று அவரை (அவரது பாவங்களை) மன்னித்தான்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
இதைச் செவியுற்ற நபித்தோழர்கள், ''அல்லாஹ்வின் தூதரே! கால்நடைகளுக்கு உதவும் விஷயத்திலும் எங்களுக்குப் பலன் கிடைக்குமா?'' என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் ''ஆம்! உயிருடைய பிராணி ஒவ்வொன்றின் விஷயத்திலும் (அதற்கு உதவி செய்யும் பட்சத்தில் மறுமையில்) அதற்கான பிரதிபலன் கிடைக்கும்'' என்று கூறினார்கள். அறிவிப்பவர் அபூ ஹுரைரா(ரலி­) நூல்: புகாரி 2363

இஸ்லாம் கூறுகின்ற இத்தகைய மனிதநேயத்தை உலக மக்கள் தெரிந்து உண்மையை உள்ள படி அறிந்து, நேர்வழி பெற இறைவன் அருள் புரிவானாக!

நன்றி: துபை TNTJ