செவ்வாய், 22 நவம்பர், 2011

17-11-2011 அன்று நடைபெற்ற வாராந்திர பயான் நிகழ்ச்சி

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு.

அல்லாஹ்வின் பேரருளால்,

தோஹா QITC மர்கசில் வாராந்திர பயான் நிகழ்ச்சி 17-11-2011 வியாழன் இரவு 8:30 மணிக்கு நடைபெற்றது.

துவக்கமாக QITC அழைப்பாளர் மௌலவி அன்சார் மஜிதி அவர்கள், "உறவுகள் ஓர் அலசல்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் (வீடியோ).

அடுத்ததாக QITC அழைப்பாளர் மௌலவி முஹம்மத் தமீம் MISc அவர்கள், "இஸ்லாம் கூறும் மனிதநேயம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் (வீடியோ).

QITC துணைப் பொருளாளர் இலியாஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் இந்திய, இலங்கையை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட தமிழ் பேசும் சகோதர சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள்.

இதே நேரம், பத்து வயதுக்கு உட்பட்ட சிறார்களுக்கான தர்பியா வகுப்பை QITC அழைப்பாளர் அப்துல் கபூர் அவர்கள் நடத்தினார்கள்.

நிகழ்ச்சியின் இறுதியில், QITC தலைவர் அஹமத் இப்ராஹீம் அவர்கள் சென்ற மாதம் நடைபெற்ற பெண்களுக்கான அறிவுப்போட்டியில் முதல் மூன்று இடங்களைப் பிடித்தவர்களின் பெயர்களை அறிவித்தார்கள்.

  1. ஆயிஷத் நஸ்மியா
  2. சித்தி ஜுனைதா
  3. சர்மிளா பானு
இவர்களுக்கான பரிசுகள் இம்மாத பெண்கள் சிறப்பு நிகழ்ச்சியில் வழங்கப்படும்.

மேலும் அன்றைய பயானிலிருந்து கேள்விகளும், சென்ற வாரம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதில்களும் சொல்லப்பட்டன.

நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அல்ஹம்துலில்லாஹ்.