செவ்வாய், 1 நவம்பர், 2011

28-10-2011 அன்று நடைபெற்ற அரபி பாட வகுப்பு

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு.
அல்லாஹுவின் பேரருளால்,

தோஹா QITC மர்கசில் 28-10-2011 வெள்ளிக்கிழமை அன்று மாலை மஹ்ரிப் தொழுகைக்குப்பின் வாராந்திர அரபி பாட வகுப்பு (17 வது வாரம்) நடைபெற்றது.

QITC அழைப்பாளர் மௌலவி. அன்சார் அவர்கள் அனைவரும் சரியான உச்சரிப்பில் குர்ஆனை ஓதவேண்டும் என்பதை வலியுறுத்தி இவ்வகுப்பை நடத்தினார்கள்.

மேலும் சவூதி மர்கஸ் அழைப்பாளர் மவ்லவி. அப்துஸ்ஸமத் மதனி அவர்கள் "கிதாபுத் தவ்ஹீத்" என்ற நூலின் பாடத்தை விளக்கி "தவ்ஹீத்" வகுப்பை நிறைவு செய்தார்கள்.

தமிழறிந்த இந்திய -இலங்கை நாடுகளை சார்ந்த ஏராளமான சகோதர, சகோதரிகள் இதில் ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள்.

அல்ஹம்துலில்லாஹ்.