சனி, 17 மார்ச், 2012

15-03-2012 கத்தர் மண்டல மர்கஸில் வாராந்திர சொற்பொழிவு

அல்லாஹ்வின் பேரருளால்,

கத்தர் மண்டல மர்கஸில் [QITC ] வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி 15-03-2012 வியாழன் இரவு 8:30 மணி முதல் 10:00 மணி வரை இணைப்பொதுச்செயலாளர் சகோதரர், வக்ரா ஃபக்ருதீன்  அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

துவக்கமாக QITC அழைப்பாளர் மௌலவி, ரிழ்வான் அவர்கள் "சமுதாய மறுமலர்ச்சியின் திறவுகோல் - கல்வி" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

அடுத்ததாக QITC அழைப்பாளர் மௌலவி, அன்ஸார் அவர்கள் "ஹூஜூராத் அத்தியாயத்தின் விளக்கவுரை" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். 

இறுதியாக, QITC அழைப்பாளர் மௌலவி, முஹம்மத் அலீ அவர்கள் "நபிகளாரின் இறுதி நாட்கள் தரும் படிப்பினை" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

பின்பு, மண்டல செயலாளர் மௌலவி,முஹம்மத் அலீ அவர்கள் அறிவிப்புகளும், அன்றைய பயானிலிருந்து கேள்விகளும், சென்ற வாரம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதில்களும் கூறினார்கள்.

இந்நிகழ்ச்சியில் இந்திய-இலங்கையை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட சகோதர- சகோதரிகள் மற்றும் சிறார்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள். 

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

அல்ஹம்துலில்லாஹ்.