ஞாயிறு, 9 செப்டம்பர், 2012

06-09-2012 கத்தர் மண்டல மர்கஸில் வாராந்திர சொற்பொழிவு

அல்லாஹ்வின் பேரருளால்,

கத்தர் மண்டல மர்கஸில் [QITC] வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி 06-09-2012 வியாழன் இரவு 8:30 மணி முதல் 10:00 மணி வரை செயலாளர் மௌலவி, முஹம்மத் அலீ, M.I.Sc. அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

துவக்கமாக மண்டல அழைப்பாளர் சகோதரர். ஹயாத் பாஷா அவர்கள் "சுவர்க்கம் செல்லும் வழி" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

அடுத்ததாக மண்டல அழைப்பாளர் சகோதரர். காதர் மீரான் அவர்கள், "நன்மையை ஏவு-தீமையை தடு" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

இறுதியாக,சவூதி மர்கஸ் அழைப்பாளர் மௌலவி, அப்துஸ்ஸமத் மதனீ அவர்கள் "நாயனை நினைவில் நிறுத்துவோம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

பின்பு, மண்டல தலைவர் டாக்டர். அஹ்மத் இப்ராஹீம் அவர்கள் அறிவிப்புகள் செய்தார்கள்.

இந்நிகழ்ச்சியில் இந்திய-இலங்கையை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட சகோதர- சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள். 

இதே நேரம், மௌலவி, இஸ்ஸதீன் ரிழ்வான் சலஃபி அவர்கள் குழந்தைகளுக்கான தர்பியா வகுப்பை, தர்பியா அறையில் வைத்து நடத்தினார்கள்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

அல்ஹம்துலில்லாஹ்.