சனி, 29 செப்டம்பர், 2012

28-09-2012 கத்தர் மண்டல "பெண்கள் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி"

அல்லாஹுவின் அருளால், 

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமா'அத்,கத்தர் மண்டலம் சார்பாக ஒவ்வொரு மாதமும் இறுதி வெள்ளிக்கிழமைகளில் , பெண்களுக்கு பெண்களே நடத்தும் "பெண்கள் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி", மண்டல [QITC] மர்கசில் 28-10-2012 வெள்ளி அன்று மாலை 7:௦௦00 முதல் 8:00 மணி வரை சகோதரி. கதீஜத்துல் நூரியா அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

ஆரம்பமாக, சகோதரி. ஃபாரிஸா அவர்கள் "சிறிய செயல்கள் - பெரிய நன்மைகள்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

பின்பு,சகோதரி. அஷ்ரஃப் நிஷா அவர்கள் "சிறந்த சமுதாயம்" என்ற தொடர் தலைப்பில் "குடும்பத்தில் பெண்களுக்குரிய பொறுப்புகள்" பற்றி உரையாற்றினார்கள்.

இந்த நிகழ்ச்சியில் 50 க்கும் மேற்பட்ட சகோதரிகளும், சிறுமிகளும் கலந்து கொண்டார்கள்.

அல்ஹம்துலில்லாஹ்.