ஞாயிறு, 9 செப்டம்பர், 2012

07-09-2012 கத்தர் மண்டல மர்கஸில் அரபி இலக்கணப் பயிற்சி வகுப்பு

அல்லாஹுவின் பேரருளால், 

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமா'அத்,கத்தர் மண்டல மர்கஸில் [QITC], ரமதான் இடைவேளைக்குப் பிறகு, 07-09-2012 வெள்ளிக்கிழமை அன்று மாலை 6:30 மணி முதல் 7:30 மணி வரை, வாராந்திர "அரபி இலக்கணப் பயிற்சியின்" பதிமூன்றாவது வகுப்பு நடைபெற்றது.

ஸவூதி மர்கஸ் அழைப்பாளர் மௌலவி,அப்துஸ்ஸமத் மதனீ அவர்கள் இவ்வகுப்பில் "வினைச்சொற்களின்" பல்வேறு வடிவங்களைக் குறித்து விரிவாக பாடம் நடத்தினார்கள்.

இன்ஷாஅல்லாஹ், இவ்வகுப்பு ஒவ்வொரு வாரமும், இம்மர்கஸில் மஃக்ரிப் தொழுகையை தொடர்ந்து,நடைபெறும்.