சனி, 1 செப்டம்பர், 2012

கத்தர் மண்டல மர்கஸில் வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி 30-08-2012

அல்லாஹ்வின் பேரருளால், 

கத்தர் மண்டல மர்கஸில் [QITC] வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி 30-08-2012 வியாழன் இரவு 8:30 மணி முதல் 10:00 மணி வரை மண்டல துணைச் செயலாளர் சகோதரர். காதர்மீரான் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

துவக்கமாக மண்டல அழைப்பாளர் சகோதரர். காதர்மீரான் அவர்கள் "இறையச்சம் - ரமளானுக்குப் பின்னும் தொடரட்டும்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

அடுத்ததாக மண்டல அழைப்பாளர் மௌலவி. ரில்வான் அவர்கள் "நேரத்தின் முக்கியத்துவம் - இஸ்லாத்தின் பார்வையில்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

இறுதியாக, மண்டல அழைப்பாளர் மௌலவி. அப்துஸ்ஸமத் மதனீ அவர்கள் "போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

பின்பு, மண்டல துணைத்தலைவர் சகோதரர். ஜியாவுதீன் அவர்கள் அறிவிப்புகளும், அன்றைய பயானிலிருந்து கேள்விகளும் கூறினார்கள்.

இந்நிகழ்ச்சியில் இந்திய-இலங்கையை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட சகோதர- சகோதரிகள் மற்றும் சிறார்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அல்ஹம்துலில்லாஹ்.