செவ்வாய், 1 டிசம்பர், 2015

மாநபியை மட்டம் தட்டும் ஷியாக்கள்


ஷியாக்களின் கொள்கையும் வரலாறும் (ஷியாக்கள் ஓர் ஆய்வு -14)

மாநபியை மட்டம் தட்டும் ஷியாக்கள்

அபூஉஸாமா

ஷியாக்களின் நூலான அல்அன்வாருன் நுஃமானியா என்ற நூலில் இடம் பெற்ற இரண்டு செய்திகளைக் குறிப்பிட்டிருந்தோம். இந்த இரண்டு செய்திகளிலும், அலீ (ரலி) அவர்களுக்கு தெய்வீகத் தன்மையைக் கொடுப்பதுடன் நிற்காமல், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை விட அலீயை மிக அதிகமாக உயர்த்துகின்றனர் ஷியாக்கள்.

ஜிப்ரீல் (அலை) அவர்கள் அலீ (ரலி) அவர்களைப் பாராட்டுகின்ற விதம், வர்ணிக்கின்ற வர்ணனைகள் அனைத்தும், நபி (ஸல்) அவர்களை விட அலீ உயர்ந்தவர் என்று பறை சாற்றும் வகையில் அமைந்துள்ளன.

அதுபோல் நபி (ஸல்) அவர்கள் ஸஃபிய்யா (ரலி)யிடம், அலீயைப் பற்றித் தெரிவித்ததாக இந்நூலில் கூறப்படும் கருத்துக்கள், தம்மை விட அலீ உயர்ந்தவர், அலீ கோபப்பட்டால் அல்லாஹ் கோபப்படுவான்; அவர் கோட்டையை உலுக்கினால் அல்லாஹ் வானத்தை உலுக்குவான்; அந்த அளவுக்கு அலீ உயர்ந்தவர் என்று குறிப்பிடுவது போல் அமைந்திருக்கின்றன.

இப்படித் தான் இந்த ஷியா ஷைத்தான் அந்தச் செய்திகளில் எழுதி வைத்துள்ளான்.

ஷியாக்களின் வேலையே அலீயை உயர்த்தி, நபிமார்கள், மலக்குமார்கள் அத்தனை பேரையும், நபி (ஸல்) அவர்கள் உட்பட அத்தனை பேரையும் மட்டம் தட்டுவது தான்.

வெளிப்படையில் பார்க்கும் போது நபி (ஸல்) அவர்களை உயர்த்துவது போல் தோன்றும். ஆனால் உள்ளுக்குள் தாக்குவது தான் இவர்களது வேலை.

இது தொடர்பாக நிஃமத்துல்லாஹ் அல்ஜஸாயிரி என்பவன் கூறுவதைக் கேளுங்கள்.

தலைமுறை தலைமுறையாய் தொடரும் ஹதீஸ்களின் அடிப்படையில் நம்முடைய நபி தான் மற்ற நபிமார்களை விடச் சிறந்தவர்கள் என்பதில் அறிஞர்களிடையே கருத்து வேறுபாடு கிடையாது. இறை நம்பிக்கையாளர்களின் தலைவர் அலீ, தூய்மையான (?) ஷியா இமாம்கள் ஆகியோர் நபிமார்களை விடச் சிறந்தவர்களா என்பதில் தான் கருத்து வேறுபாடு நிலவுகின்றது. ஆனால் ஷியா இமாம்களின் பாட்டனார் முஹம்மது (ஸல்) அவர்கள் விஷயத்தில் எந்தக் கருத்து வேறுபாடும் நிலவவில்லை. முஹம்மது (ஸல்) அவர்கள் அலீ மற்றும் இமாம்களை விடச் சிறந்தவர் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

உலுல் அஸ்ம் என்ற தரத்தில் உள்ள நபிமார்களைத் தவிர மற்ற நபிமார்களை விட இந்த இமாம்கள் சிறந்தவர்கள் என்று ஒரு சாரார் கருத்து தெரிவிக்கின்றனர்.

உலுல் அஸ்ம் தரத்திலுள்ள நபிமார்களும் இந்த இமாம்களும் சமமானவர்கள் என்று வேறு சிலர் கருத்துத் தெரிவிக்கின்றனர்.

பிந்திய காலத்து அறிஞர்கள் நமது இமாம்கள், உலுல் அஸ்ம் நபிமார்களை விடச் சிறந்தவர்கள் என்ற கருத்துக் கொண்டிருக்கின்றனர். அது தான் சரியான கருத்தாகும்.

நூல்: ஜஸாயிர் எழுதிய அல் அன்வாருன் நுஃமானியா, பக்கம்: 128

நிஃமத்துல்லாஹ் (லஃனத்துல்லாஹ்) ஜஸாயிர் என்பவன், நபிமார்களை விடத் தங்கள் இமாம்கள் சிறந்தவர்கள் என்று கூறத் துணிந்திருக்கின்றான். நபி (ஸல்) அவர்களுக்கு விதிவிலக்குக் கொடுத்து அவர்களுக்குக் கண்ணியம் சேர்த்திருக்கிறான் என்று நாம் நினைக்கலாம். ஆனால் உண்மை அதுவல்ல! இந்த விதிவிலக்கை அவன் வேண்டா வெறுப்பாகவே கொடுத்திருக்கிறான். இதை முல்லா முஹம்மது பாக்கிர் என்பவன் எழுதிய பிஹாருல் அன்வார் என்ற நூலில் இடம் பெறும் செய்தியிலிருந்து விளங்கிக் கொள்ளலாம்.

நபி (ஸல்) அவர்கள் அலீயை நோக்கி, அலீயே! எனக்குக் கிடைக்காததெல்லாம் உனக்குக் கிடைத்திருக்கிறது. ஃபாத்திமா உன் மனைவி! ஃபாத்திமாவைப் போன்று எனக்கு மனைவி இல்லை. உனக்கு ஃபாத்திமா மூலம் இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள். அவ்விருவர் போல் எனக்குப் பிள்ளைகள் இல்லை. கதீஜா உன் மனைவியின் தாயார். எனக்கு அவரைப் போன்று அன்பான மாமியார் இல்லை. நான் உனது அன்பாளன். உன் போன்ற அன்பாளன் எனக்கு இல்லை. உறவு முறையில் ஜஃபர் உன் சகோதரர். ஜஃபர் போன்ற சகோதரர் எனக்கு இல்லை. மக்காவிலிருந்து ஹிஜ்ரத் செய்து வரும் ஹாஷிமி கிளையைச் சார்ந்தவருமான ஃபாத்திமா உனது தாயார். (அலீயின் தாயார் பெயர் ஃபாத்திமா) அவர் போன்ற தாயாரை நான் அடைவது எப்போது? என்று கூறினார்கள்.

நூல்: பிஹாருல் அன்வார், பக்கம்: 129

பொய்யன் முஹம்மது பாக்கிர் அளக்கும் இந்தச் சம்பவம் தெரிவிப்பது என்ன?

நபி (ஸல்) அவர்களை விட அலீ பன்மடங்கு உயர்ந்தவர்; பல்வேறு கிடைப்பதற்கரிய பாக்கியங்களைப் பெற்றவர் என்று சித்தரித்து நபி (ஸல்) அவர்களை மட்டம் தட்டுகின்றான். அவர்களது தரத்தை அலீயின் தரத்திற்குக் கீழே தாழ்த்தியிருக்கிறான். எனவே ஜஸாயிர் என்பவன், நபிமார்களை விட ஷியா இமாம்கள் உயர்ந்தவர்கள் என்பதிலிருந்து நபி (ஸல்) அவர்களுக்கு விதிவிலக்குக் கொடுத்திருப்பது வெறும் வேஷம் தான்.

முஃபீத் என்ற ஷியாக்களின் தலைவன் தெரிவிக்கின்றான்.

(ஹுதைபாவே!) என்னிடம் குறுக்கிட்ட மனிதரை நீ பார்த்தாயா? என்று நபி (ஸல்) அவர்கள் என்னிடம் கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதரே! ஆம் என்றேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், இவர் ஒரு வானவர். இந்த நேரத்திற்கு முன்னர் பூமியில் அவர் இறங்கியதே கிடையாது. அலீக்கு ஸலாம் சொல்ல வேண்டும் என்று கண்ணியமிக்க அல்லாஹ்விடம் அவர் அனுமதி கேட்டார். அல்லாஹ் அவருக்கு அனுமதி கொடுத்ததும் அலீக்கு வந்து ஸலாம் சொன்னார் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஹுதைபா

நூல்: முஃபீத் எழுதிய அல் ஆமாலி

இந்த மலக்கு நபி (ஸல்) அவர்களுக்கு ஸலாம் சொல்ல வருகிறார் என்றால் அது நபி (ஸல்) அவர்களுக்குரிய மரியாதை எனலாம். ஆனால் அவர் அலீக்கு ஸலாம் சொல்ல வருகின்றார். அதை நபி (ஸல்) அவர்கள் பார்த்து ஹுதைபாவிடம் தெரிவிக்கின்றார்கள் என்றால், நபி (ஸல்) அவர்களை விட அலீ உயர்ந்த பதவியில் இருப்பது போலவும், நபியவர்கள் அலீக்கு தனிச் செயலாளர் போலவும் இவன் சித்தரிக்கின்றான்.

நபி (ஸல்) அவர்களை இந்த முஃபீத் என்ற ஷியா ஷைத்தான் எந்தத் தரத்தில் கொண்டு நிறுத்துகிறான் என்று பாருங்கள். எந்தத் தகுதியை அவர்களுக்குக் கொடுக்கிறான் என்று பாருங்கள்.

ஷியா என்பது பொய் என்ற புற்று நோயைப் பின்னணியாகக் கொண்டது. அந்தப் புற்று நோய் எப்படிப் பன்மடங்காக விரிந்து வேகமாகப் பரவுகின்றது என்று பார்ப்போம்.

தமது தோழர்களின் கூட்டத்தில் அமர்ந்திருந்த அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை நோக்கி அலீ (ரலி) வந்த போது, ஆதமின் படைப்பையும், நூஹின் ஞானத்தையும், இப்ராஹீமின் சகிப்புத் தன்மையையும் காண விரும்புவோர் அலீயைப் பார்த்துக் கொள்ளட்டும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். இவ்வாறு தன் தந்தை வழியாக அபூ இஸ்ஹாக் அறிவிக்கின்றார். இதை முஃபீத், தனது ஆமாலி நூலில் 132ம் பக்கத்தில் குறிப்பிடுகின்றான். ஷியா ஷைத்தான்களுக்கு அலீயைப் புகழ்ந்து அழகு பார்க்க வேண்டும். அந்தப் புகழை நபி (ஸல்) அவர்களின் பெயரைப் பயன்படுத்தி அரங்கேற்றுகின்றனர்.

தன்னை விட அலீ தான் சிறந்தவர் என்று நபி (ஸல்) அவர்களே சொல்வது போன்ற ஒரு போலித் தோற்றத்தை ஏற்படுத்துகின்றனர்.