சனி, 14 ஜனவரி, 2012

QITC மர்கசில் 12-01-2012 அன்று நடைபெற்ற வாராந்திர பயான் நிகழ்ச்சி


அல்லாஹ்வின் பேரருளால்,

தோஹா QITC மர்கசில் வாராந்திர பயான் நிகழ்ச்சி 12-01-2012 வியாழன் இரவு 8:30 மணிக்கு நடைபெற்றது.

துவக்கமாக சவூதி மர்கஸ் அழைப்பாளர் சகோதரர் யூசுப் அவர்கள், "மரணத்தின் வேளையில்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

அடுத்ததாக QITC அழைப்பாளர் மௌலவி. முஹம்மத் தமீம் M.I.Sc. அவர்கள், "உறக்கத்தின் ஒழுங்குகள்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

சவுதி மர்கஸ் அழைப்பாளர் மவ்லவி. அப்துஸ் ஸமத் மதனி அவர்கள், "நன்றி மறவோம்" என்ற தொடர் தலைப்பில் உரையாற்றினார்கள்.




QITC இணைச்செயலாளர் M.S.ஃபக்ருதீன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் இந்திய, இலங்கையை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட தமிழ் பேசும் சகோதர சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள்.

இறுதியாக QITC தலைவர் டாக்டர். அஹ்மத் இப்ராஹீம் அவர்கள் அறிவிப்புகளும், QITC செயலாளர் மௌலவி முஹம்மத் அலி M.I.Sc. அவர்கள் அன்றைய பயானிலிருந்து கேள்விகளும், சென்ற வாரம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதில்களும் கூறினார்கள்.

மேலும் இன்ஷாஅல்லாஹ் 20-01-2012 வெள்ளிக்கிழமை அன்று நடைபெறவுள்ள ஆலோசனைக்கூட்டத்தில் அனைவரும் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்பட்டார்கள்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அல்ஹம்துலில்லாஹ்.