சனி, 6 அக்டோபர், 2012

05-10-2012 ஸவூதி மர்கஸ் கேட்போர் கூடத்தில் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி

அல்லாஹ்வின் பேரருளால்,

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா'அத்-கத்தர் மண்டல பிரிவும் [QITC], ஸவூதி மர்கஸும் இணைந்து நடத்திய சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி, ஸவூதி மர்கஸ் கேட்போர் கூடத்தில், 05-10-2012 வெள்ளி இரவு 7:30 மணி முதல் 10:00 மணி வரை ஸவூதி மர்கஸ் அழைப்பாளர் சகோதரர்.முஹம்மத் யூசுஃப் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

துவக்கமாக மண்டல தலைவர் டாக்டர்.அஹ்மத் இப்ராஹீம் அவர்கள் "வரவேற்புரை" நல்கினார்கள்.

தொடர்ந்து, ஸவூதி மர்கஸ் அழைப்பாளர் சகோதரர்.முஹம்மத் யூசுஃப் அவர்கள் "மார்க்கம் அல்லாஹுவிற்கே சொந்தம்" என்ற தலைப்பில் சிற்றுரையாற்றினார்கள்.

அடுத்ததாக, மண்டல அழைப்பாளர் மௌலவி,முஹம்மத் தமீம் M.I.Sc. அவர்கள் "தரணி கண்டிராத தாய்மார்கள்" என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்கள்.

இறுதியாக, சவூதி மர்கஸ் அழைப்பாளர் மௌலவி,அப்துஸ்ஸமத் மதனீ அவர்கள் "உலகம் கண்டிராத உத்தமர்கள்" என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்கள்.

பின்பு, மண்டல தலைவர் டாக்டர்.அஹ்மத் இப்ராஹீம் அவர்கள் அறிவிப்புகள் பல செய்ய, தொடர்ந்து செயலாளர் மௌலவி,முஹம்மத் அலீ M.I.Sc. அவர்கள் "நன்றியுரை" நவின்று நிகழ்ச்சியை நிறைவு செய்தார்கள்.

இந்நிகழ்ச்சியில் இந்திய-இலங்கையை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட சகோதர-சகோதரிகள் தங்கள் குழந்தைகளுடன் ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அல்ஹம்துலில்லாஹ்.