சனி, 2 பிப்ரவரி, 2013

31-01-2013 கத்தர் மண்டலம் - அல்-நஜாஹ் கிளையில் வாராந்திர சொற்பொழிவு



அல்லாஹ்வின் பேரருளால், 

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமா'அத், கத்தர் மண்டலம், சனாயிய்யா பகுதியிலுள்ள அல்-நஜாஹ் கிளையில் அல்-நஜாஹ் ஆட்டோமேடிக் டைல்ஸ் ஃபேக்டரி வளாகத்தில், 31-01-2013 வியாழன் இரவு 8:30 மணி முதல் 9:30 மணி வரை, வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.

ஆரம்பமாக, மண்டல அழைப்பாளர் சகோதரர்.தஸ்தகீர் அவர்கள் 'எங்கே நாம் இருக்கிறோம்?' என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

அடுத்ததாக,மண்டல அழைப்பாளர் மௌலவி,அன்ஸார் மஜீதி அவர்கள் 'எங்கே நம் விழிப்புணர்வு' என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

இறுதியாக, மண்டல செயலாளர் சகோதரர்.தஸ்தகீர் அவர்கள் அறிவிப்புகள் பல செய்து நிகழ்ச்சியை நிறைவு செய்தார்கள்.

இந்நிகழ்ச்சியில் இந்திய-இலங்கையை சேர்ந்த 70-க்கும் மேற்பட்ட சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் இரவு உணவு வழங்கப்பட்டது. 

அல்ஹம்துலில்லாஹ்.