சனி, 9 பிப்ரவரி, 2013

07-02-2013 கத்தர் மண்டல மர்கஸில் வாராந்திர சொற்பொழிவு



அல்லாஹ்வின் பேரருளால், 

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமா'அத், கத்தர் மண்டல  மர்கஸில் [QITC] வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி 07-02-2013 வியாழன்  இரவு 8:40 மணி முதல் 10:10 மணி வரை இணைச் செயலாளர் சகோதரர். ஃபக்ருதீன் அலீ அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

ஆரம்பமாக,மண்டல அழைப்பாளர் சகோதரர்.ஹயாத் பாஷா  அவர்கள் "அறிவை அர்த்தமாக பயன்படுத்துவோம்"  என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

அடுத்ததாக, மண்டல அழைப்பாளர் டாக்டர்.அஹ்மத் இப்ராஹீம் அவர்கள் "நாட்டு நடப்பும்- நமது மார்க்கமும்"  என்ற தலைப்பில் கேள்வி- பதில் முறையில் நிகழ்ச்சி நடத்தினார்கள்.

இறுதியாக,சவூதி மர்கஸ் அழைப்பாளர் மவ்லவி,அப்துஸ்ஸமத் மதனீ அவர்கள் "நாயனை நினைவில் நிறுத்துவோம்' என்ற தொடர் தலைப்பில் உரையாற்றினார்கள்.

பின்பு , மண்டல தலைவர் டாக்டர்.அஹ்மத் இப்ராஹீம் அவர்கள் அறிவிப்புகள் பல செய்ய, தொடர்ந்து மண்டல இணைச் செயலாளர் சகோதரர். ஃபக்ருதீன் அலீ அவர்கள் இன்றைய பயானில் இருந்து மூன்று கேள்விகள் கேட்டு  நிகழ்ச்சியை நிறைவு செய்தார்கள்.

இந்நிகழ்ச்சியில் இந்திய-இலங்கையை சேர்ந்த 130-க்கும் மேற்பட்ட சகோதர- சகோதரிகள்  ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

அல்ஹம்துலில்லாஹ்.