சனி, 11 மே, 2013

கத்தர் மண்டல மர்கஸில் வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி 09-05-2013

அல்லாஹ்வின் பேரருளால்,

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமா'அத், கத்தர் மண்டல மர்கஸில் வாராந்திர சொற்பொழிவு 09-05-2013 வியாழன் இரவு 8:30 மணி முதல் 10:00 மணி வரை சகோதரர் இல்யாஸ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

ஆரம்பமாக,மண்டல அழைப்பாளர் சகோதரர் முஹமத் யூஸுப் அவர்கள் "நன்மையின் பால் விரைவோம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்

பின்னர் மவ்லவி அன்ஸார் மஜிதி அவர்கள் "வீண் விரயம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

பின்னர் அடுத்ததாக மவ்லவி அப்துஸ் சமத் மதனீ அவர்கள் "அல்லாஹ்விற்காக நேசிப்போம், அல்லாஹ்விற்காக வெறுப்போம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

பின்பு மண்டலத்தலைவர் சகோதரர் மஸ்வூத் அவர்கள் எதிர்வரும் ரமலான் மாதத்தை ஒட்டி பிற மத சகோதரர்களுக்கான கட்டுரைப்போட்டி நடுத்துவது குறித்தும் இன்னும் பல அறிவிப்புகளும் செய்து, அன்றைய உரையிலிருந்து மூன்று கேள்விகள் கேட்டு நிகழ்ச்சியை நிறைவு செய்து வைத்தார்கள்.

இந்நிகழ்ச்சியில் இந்திய-இலங்கையை சேர்ந்த 140-க்கும் மேற்பட்ட சகோதர- சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அல்ஹம்துலில்லாஹ்.