திங்கள், 16 செப்டம்பர், 2013

கத்தர் மண்டல சனையா அல் நஜாஹ் கிளையில் 12-09-2013 வியாழன் சொற்பொழிவு நிகழ்ச்சி


அல்லாஹ்வின் பேரருளால்,

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமா'அத், கத்தர் மண்டல QITC யின் சனையா கிளையான அல் நஜாஹ் கிளையில் 12-09-2013 வியாழன் இரவு 8:40 மணி முதல் 10;00 மணி வரை கிளைப்பொறுப்பாளர் சகோதரர் .சாதிக் அவர்கள் தலைமையில் சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் முதலில் சகோதரர் அப்துர் ரஹ்மான் அவர்கள் "மறுமையில் கிடைக்கும் தண்டனைகள்"என்ற தலைப்பிலும்

அடுத்ததாக மவ்லவி முஹமத் லாயிக் அவர்கள் "முமீன்களின் கடமைகள்" என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தினார்கள்.

இதில் ஏராளமான இந்திய இலங்கையை சேர்ந்த சகோதரர்கள் கலந்துகொண்டு பயன் பெற்றனர் அனைவருக்கும் இரவு உணவு வழங்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்!